“என்னால ஆபீஸ் வரமுடியாது”... ஒரு நாள் சம்பளத்தை விட டாக்ஸி கட்டணம் அதிகம்... ஊழியர் அதிரடி!

டெல்லி என்சிஆர் பகுதியில் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருபவர் ஒருவர். இவர் கனமழையின் காரணமாக வீட்டில் இருந்தே வேலை செய்வதாக மேலாளரிடம் அனுமதி வாங்கினார். அதனை மறுத்த மேலாளர் ராபிடோ அல்லது indrive மூலம் நிறுவனத்திற்கு வரும்படி ஊழியரை வலியுறுத்தியுள்ளார். அதற்கு அந்த ஊழியர் “டாக்ஸி கட்டணம் என் ஒரு நாள் சம்பளத்தை விட அதிகம். எனவே என்னால் வர இயலாது” எனக் கூறியுள்ளார்.
அதன் பிறகு மேலாளர் அவரிடம் மறுநாள் அலுவலகத்திற்கு வரும்படி கூறினார். இந்த உரையாடல் நிகழ்ச்சி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில் நெட்டிசன்கள் மத்தியில் சிரிப்பலைகளை ஏற்படுத்தியுள்ளது. அதில் ஒருவர் “நான் ஒரு மேலாளராக இருந்தால், இந்த ஊழியரை நேசித்திருப்பேன்” எனக் கூறியுள்ளார். இன்னொருவர் “மிகவும் நியாயமில்லாத முடிவு, சம்பளம் குறைவாக இருக்கும் போது செலவுகளை கருதி நியாயமான முடிவெடுத்தது தான் புத்திசாலித்தனம்” எனப் பதிவிட்டுள்ளார்.
இந்த உரையாடலின் மூலம் மேலாளரின் பிடிவாதம் மற்றும் ஊழியரின் நியாயமான பதில் நெட்டிசன்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் இந்த பதிவு பல நிறுவனங்களில் வேலை செய்யும் ஊழியர்களிடையே விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!