“பரீட்சை சரியா எழுதலை...” - 10ம் வகுப்பு மாணவன் தூக்கிட்டு தற்கொலை!

 
10 10

தமிழகத்தில் 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் நடைபெற்று வரும் நிலையில், பொதுத்தேர்வை சரியாக எழுதவில்லை என்கிற மன அழுத்தத்தில் இருந்து வந்த 10ம் வகுப்பு மாணவர் ஒருவர் திருவள்ளூர் மாவட்டத்தில் தூக்கிட்டு தற்கொலைச் செய்துக் கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியைச் சேர்ந்தவர் சரவணன். இவருடைய மகன் கணேஷ்(15). கணேஷ் அதே பகுதியில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில் பொதுத்தேர்வை எழுதிவிட்டு வீட்டிற்கு வந்த கணேஷ், வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.  

ஆம்புலன்ஸ்

மாலை பள்ளி முடிந்து வீடு திரும்பிய அவரது கணேஷின் தம்பி புவன்ராஜ், கணேஷ் தூக்கில் தொங்கிய நிலையில் இருப்பதை கண்டு அலறியபடிக் கூச்சலிட்டார். புவன்ராஜுன் சத்தம் கேட்டு வந்த அக்கம்பக்கத்தினர் கணேஷை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் மருத்துவர்கள் கணேஷைப் பரிசோதித்து பார்த்து விட்டு, அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர்.

போலீஸ்

திருவள்ளூர் மாவட்டம் போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், தமிழ் மொழித் தேர்வை சரியாக எழுதவில்லை என மாணவன் வருந்தியதாக தெரிய வந்தது.

இது குறித்து வேலைக்கு சென்றிருந்த தனது தாய் பாரதியிடம் தொலைபேசியில் அழுதபடி கூறியதாகவும், அவர் ஆறுதல் கூறிய பின்னரும் மாணவன் இந்த விபரீத முடிவை எடுத்ததாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும்  ஏற்படுத்தியுள்ளது..

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!