இறுதிச் சடங்கு செய்ய காசில்ல... 2 வருடமாக தந்தையின் உடலை அலமாரியில் மறைத்து வைத்த மகன்... பகீர் வாக்குமூலம்!

இது குறித்து நோபுஹிகோவிடம் நடத்தப்பட்ட தீவிர விசாரணையில், 2023 ம் ஆண்டு ஜனவரி மாதம், வேலை முடிந்து திரும்பியபோது தனது 86 வயதான தந்தை வீட்டில் உயிரிழந்த நிலையில் சடலமாக கிடந்தார், ஆனால் எப்படி இறந்தார் எனத் தெரியவில்லை. அவருக்கு இறுதிச் சடங்குகள் செய்வதற்கு அதிகளவு செலவாகும் என்பதால், அதை தவிர்ப்பதற்காக தந்தையின் உடலை அலமாரியில் மறைத்து வைத்ததை ஒப்புக் கொண்டார். இதனைக் கேட்டு போலீசார் அதிர்ச்சி அடைந்தனர்.
ஜப்பானை பொறுத்தவரை இங்கு இறுதிச்சடங்கு செய்வதற்கு 1.3 மில்லியன் யென் அதாவது இந்திய மதிப்பில் ரூ7.60 லட்சம் செலவாகலாம் எனக் கூறப்படுகிறது. இதன் காரணமாகவே அவர் தனது தந்தையின் உடலை மறைத்து வைத்திருந்ததாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் குறித்து போலீசார் "ஆரம்பத்தில் இந்த செயல்களுக்காக அவர் குற்ற உணர்ச்சியுடன் இருந்ததாகவும், பின்னர், இந்த நிலைக்கு தனது தந்தையே காரணம் என நம்பி நிம்மதியடைந்ததாகவும்" தெரிவித்தனர்.
அதே நேரத்தில் தந்தையின் ஓய்வூதியத்தை 2 ஆண்டுகளாக பெற்று வந்ததால், சந்தேகத்தின் அடிப்படையில் அவரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் குறித்து அங்குள்ள சமூக வலைதளங்களில் இந்த வழக்கு எதிர்வினைகளைத் தூண்டியுள்ளது. 56 வயதான அவர் கூடுதல் ஓய்வூதியத்தை வசூலிக்க தனது தந்தையைக் கொலை செய்ததாக சிலர் கூறிவருகின்றனர். ஆனாலும், ஒரு சிலர் அவருக்கு அனுதாபமும் தெரிவித்துள்ளனர்.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!