“புருஷன் வேண்டாம்... கள்ளக்காதலன் தான் வேணும்..” - காவல் நிலையத்தில் அடம்பிடித்த இளம்பெண்!
சேலம் ஓமலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் நடந்த ஒரு குடும்பப் பிரச்சினை, சினிமா பாணியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முறைப்படி திருமணமாகி இருந்தும், தனது கணவர் வேண்டாம் என்றும், கள்ளக்காதலனுடனே வாழ்வேன் என்றும் பிடிவாதம் பிடித்த இளம்பெண்ணால், காவல் நிலையத்தில் பெரும் குழப்பம் ஏற்பட்டது. சட்டப்படி அதற்கு இடமில்லை என்று போலீசார் எச்சரித்த பின்னரே, அந்தப் பெண் வேண்டா வெறுப்பாகப் பெற்றோருடன் அங்கிருந்து சென்றார்.
சேலம் மாவட்டம், ஓமலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு முன்தினம் மாலையில் ஒரு இளம் ஜோடி வந்து தஞ்சம் அடைந்தது. சுமார் 24 வயது இளம்பெண்ணும், 25 வயது வாலிபரும் தாங்கள் காதலித்துத் திருமணம் செய்து கொண்டதாகவும், தங்களை குடும்பத்தினர் பிரித்துவிட முயற்சி செய்வதாகவும் கூறி, அங்குப் பணியில் இருந்த போலீஸ்காரர்களிடம் முறையிட்டனர்.

அடுத்த சில நிமிடங்களிலேயே அந்த இளம்பெண்ணின் பெற்றோரும், மற்றொரு தரப்பினரும் காவல் நிலையத்திற்கு வந்து சேர்ந்தனர். அந்த மற்றொரு தரப்பில் வந்த 30 வயது வாலிபர், போலீஸாரிடம் அந்தப் பெண்ணுக்குத் தான் தான் முறைப்படி தாலி கட்டிய முதல் கணவர் என்று கூறியபோது, அங்கு இருந்த அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து, போலீசார் முதல் கணவரிடமும், அந்த இளம்பெண்ணிடமும் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில், ஓமலூர் அருகே கொங்குபட்டி பகுதியைச் சேர்ந்த அந்த 30 வயது வாலிபருக்கும், காவல் நிலையத்திற்கு வந்த இளம்பெண்ணுக்கும் கடந்த 2021 ஆம் ஆண்டு திருமணம் நடந்தது தெரிய வந்தது. இந்தத் தம்பதிக்குக் குழந்தைகள் இல்லை. கணவர் சின்ன திருப்பதியில் துணிக்கடை நடத்தி வரும் நிலையில், அந்த இளம்பெண்ணோ, கணவரின் கடைக்குச் செல்லாமல் அதே பகுதியில் உள்ள மற்றொரு துணிக்கடையில் வேலைக்குச் சென்று வந்துள்ளார்.

அவ்வாறு வேலைக்குச் சென்று வரும்போது, சிமெண்ட் விற்பனைக் கடையில் வேலை செய்து வந்த 25 வயது வாலிபருடன் அவருக்குப் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் இந்தப் பழக்கம் கள்ளக்காதலாக மாறியது. இந்த நிலையில், அந்த இளம்பெண் தனது கள்ளக்காதலனான வாலிபருடன் கடந்த வாரம் வீட்டை விட்டு வெளியேறி ஊட்டிக்கு ஓட்டம் பிடித்துள்ளார். அங்கு அவர்கள் ஒரு கோவிலில் வைத்துத் தாலி கட்டிக்கொண்டு, தற்போது போலீசில் வந்து தஞ்சம் அடைந்திருப்பது தெரியவந்தது.
இவ்வளவு பெரிய களேபரத்திற்குக் காரணம் ஒரு கள்ளக்காதல் ஜோடிதான் என்று அறிந்த போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர், இளம்பெண்ணிடம் முறைப்படி தாலி கட்டிய கணவருடன் போகுமாறு போலீசார் அறிவுறுத்தினர். ஆனால், அதைச் சற்றும் சட்டை செய்யாத அந்தப் பெண், கள்ளக்காதலனுடன் தான் செல்வேன் என்று அடம்பிடித்தார்.
இதனையடுத்து, "சட்டப்படி இதற்கு இடமில்லை. முறைப்படி முதல் கணவரை விவாகரத்து செய்யாமல் வேறு ஒரு நபரைத் திருமணம் செய்து கொள்ள முடியாது. ஒன்று கணவருடன் செல்லுங்கள் அல்லது உங்கள் பெற்றோருடன் செல்லுங்கள்" என்று போலீசார் அவருக்கு எச்சரிக்கை விடுத்தனர். அதன் பின்னரே, அந்த இளம்பெண் வேறு வழியின்றி வேண்டா வெறுப்பாகத் தனது பெற்றோருடன் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார். ஓமலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் நடந்த இந்தச் சம்பவம், அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
