“ரூ.15,000 கொடுத்தா தான் ஆச்சு...” வருவாய் உதவியாளர் கைது!

தென்காசி மாவட்டத்தில், சொத்து வரி நிர்ணயம் செய்வதற்காக ரூ.15,000 லஞ்சம் வாங்கிய வருவாய் உதவியாளரைப் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தென்காசி மாவட்டம், சிவகிரி வட்டம், வடுகப்பட்டி கிராமம், தெற்குசத்திரம் பகுதியைச் சேர்ந்தவர் காளிராஜன் (36). இவர், கடந்த 2020ம் ஆண்டு புளியங்குடி 28வது வார்டில் 3 சென்ட் காலி மனையை வாங்கியுள்ளார். அந்த காலி மனையில் 800 சதுர அடியில் வீடு கட்டியுள்ளார். தனது வீட்டுக்கு குடிநீர் இணைப்பு பெற விசாரித்த போது, முதலில் காலிமனை தீர்வை கட்ட சொல்லி கூறியுள்ளனர். இதையடுத்து கடந்த மாதம் காலிமனை தீர்வை கட்டியுள்ளார்.
பின்னர் வீடு கட்டியதற்கு சொத்துவரி நிர்ணயம் செய்ய புளியங்குடி நகராட்சியில் விண்ணப்பித்துள்ளார். இதையடுத்து, நகராட்சி வருவாய் உதவியாளர் அகமது உமர், அந்த வீட்டை பார்வையிட்டு அளவீடு செய்துள்ளார். பின்னர், அலுவலகத்துக்கு வரும்படி காளிராஜிடம் கூறிவிட்டு சென்றுள்ளார். அங்கு சென்ற காளிராஜிடம், ரூ.20,000 கொடுத்தால் தான் சொத்துவரி நிர்ணயம் செய்ய முடியும் என்று கூறியுள்ளார்.
அவ்வளவு பணம் தன்னிடம் இல்லை என்ற காளிராஜிடம் பேரம் பேசி, ரூ.15,000 கொடுத்தால் தான் சொத்து வரி நிர்யணம் செய்து, ரசீது கொடுப்பதாக கூறியுள்ளார்.
லஞ்சம் கொடுக்க விரும்பாத காளிராஜ் இது குறித்து தென்காசி லஞ்ச ஒழிப்புத் துறையில் புகார் அளித்தார். இதையடுத்து, போலீசாரின் அறிவுரைப்படி, ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை வருவாய் உதவியாளர் அகமது உமரை தனது வீட்டுக்கு வரவழைத்து கொடுத்துள்ளார்.
லஞ்சப் பணத்தை அகமது உமர் பெற்றுக்கொண்டதை அறிந்த தென்காசி ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு டிஎஸ்பி பால்சுதர், ஆய்வாளர் ஜெயஸ்ரீ மற்றும் போலீஸார் விரைந்து சென்று, அகமது உமரை கைது செய்தனர். பின்னர், புளியங்குடி நகராட்சி அலுவலகத்திலும் சோதனை நடத்தினர்.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!