விஜய் ரூபானியுடன் 10 ஆண்டுகளாக கடினமான காலங்களில் கூட தோள் சேர்ந்து ஒன்றாக பணிபுரிந்தேன்... பிரதமர் மோடி உருக்கம்!

குஜராத் மாநிலத்தில் அகமதாபாத் ஏர் இந்தியா விமான விபத்தில் 241 பேர் பலியாகினர். இச்சம்பவம் இந்தியா முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், பலியானோர்க்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்தார். மேலும், விபத்தில் பலியான குஜராத் முன்னாள் முதல்வரும் பாஜக தலைவருமான விஜய் ரூபானியும் ஒருவர். பிரதமர் மோடி விஜய் ரூபானியின் வீட்டுக்கு சென்று, அவரது குடும்பத்தினருக்கு ஆறுதலும் தெரிவித்தார்.
Met the family of Shri Vijaybhai Rupani Ji.
— Narendra Modi (@narendramodi) June 13, 2025
It is unimaginable that Vijaybhai is not in our midst. I’ve known him for decades. We worked together, shoulder to shoulder, including during some of the most challenging times. Vijaybhai was humble and hardworking, firmly committed… pic.twitter.com/KbmDsKtARG
விஜய் ரூபானிக்கு இரங்கல் தெரிவித்த பிரதமர் மோடி இது குறித்து தனது எக்ஸ் பக்கத்தில், விஜய் ரூபானியின் குடும்பத்தினரைச் சந்தித்தேன். தற்போது அவர் இல்லை என்ற இழப்பை கற்பனைக்கூட செய்ய முடியவில்லை. அவரை 10 ஆண்டுகளாக எனக்கு தெரியும். கடினமான காலங்களில்கூட, நாங்கள் இருவரும் தோள் சேர்ந்து ஒன்றாக வேலை செய்தோம் என பதிவிட்டுள்ளார்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!