உன் தம்பியை கொன்றுவிட்டேன்.. போதுமா? - மனைவியின் சகோதரனை கொன்றுவிட்டு தகவல் சொன்ன கணவன் !

 
தங்கமாரி

கோவை இடையார்பாளையம் அடுத்துள்ள கோவில்மேடு பகுதியை சேர்ந்த மணிகண்டன் (33), தனது தாயாருடன் வசித்து வந்தார். இவருக்கு  தங்கமாரி மற்றும் செல்வி என 2 சகோதரிகள் உள்ளனர். 

இந்த நிலையில் கடந்த 21ஆம் தேதி குடும்பத்தகராறு காரணமாக தங்கமாரியை அவரது கணவர் ஐயப்பன் தாக்கியுள்ளார். இதனை தங்கமாரி தனது தாயாரிடம் கூறியுள்ளார். இந்த தகவல் மணிகண்டனுக்கு தெரியவந்துள்ளது. இதனால் அவர் தனது தங்கை கணவர் ஐயப்பனை கண்டித்துள்ளார். மேலும் குடிபோதையில் தங்கையின் வீட்டிற்கே சென்று ஐயப்பனை தகாத வார்த்தைகளால் திட்டியுள்ளார்.

இதனால் அச்சமடைந்த தங்கமாரி தனது மற்றொரு சகோதரி செல்வியின் கணவர் பாலசுப்ரமணியத்திற்கு தகவல் கொடுத்தார். ஆனால் அவர் தங்கமாரி வீட்டுக்கு செல்ல மறுத்துவிட்டார். 

தங்கமாரி

இதனால் பாலசுப்பிரமணியத்தை அவரது மனைவியான தங்கமாரியின் சகோதரி அவதூறாக பேசியதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த பாலசுப்பிரமணியம் மது போதையில்நேராக மணிகண்டன் வசிக்கும் வீட்டிற்கு சென்று அவருடன் தகராறு செய்துள்ளார். மேலும் இரும்பு கம்பியால் மணிகண்டனை கடுமையாக தாக்கியுள்ளார்.

இதில் இரும்பு கம்பி அவரது உடலில் குத்தியதால் மணிகண்டன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துவிட்டார். இதனையடுத்து பாலசுப்பிரமணியம் அங்கிருந்து தலைமறைவானார். பின்னர் பாலசுப்பிரமணியம் தனது மனைவி செல்விக்கு போன் செய்து ’உன் தம்பி இருக்கிறானா இல்லை செத்துட்டானா போய் பார்’  என பேசி போனை துண்டித்து விட்டார்.

தங்கமாரி

அவர் பதறியடித்து சென்று பார்த்தப்போது மணிகண்டன் உயிரிழந்தது தெரியவந்தது. தகவல் அறிந்து சென்ற போலீசார் உயிரிழந்த மணிகண்டனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதைத்தொடர்ந்து தலைமறைவாக இருந்த பாலசுப்ரமணியத்தை கைது செய்தனர்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

2023 இந்த 6 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்! பயன்படுத்திக்கோங்க

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

From around the web