எனக்கு திருமணம் செய்துகொள்ள ஆசையாக இருக்கிறது... மனம் திறந்த சுஷ்மிதா சென்!

தமிழ் திரையுலகில் 'ரட்சகன்' படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றவர் நடிகை சுஷ்மிதா சென். முதல்வன் படத்தில் சக்கலக்க பேபி என்ற பாடலுக்கு நடனம் ஆடி இருந்தார். இந்தியில் அதிக படங்களில் நடித்து முன்னணி கதாநாயகியாக வலம் வந்தார். தற்போது 49 வயதாகும் நடிகை சுஷ்மிதா சென், இன்னும் திருமணம் செய்து கொள்ளவில்லை.
இரண்டு குழந்தைகளை தத்தெடுத்து வளர்த்து வருகிறார். ரோஹ்மன் என்பவருடன் காதல் மலர்ந்த நிலையில், பின்னர் இருவரும் பிரிந்து விட்டனர்.இந்நிலையில் சமூக வலைத்தளத்தில் ரசிகர்களுடன் சுஷ்மிதா சென் கலந்துரையாடினார். அப்போது ஒரு ரசிகர், "எப்போது திருமணம் செய்து கொள்வீர்கள்?" எனக் கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதில் அளித்த சுஷ்மிதா சென், "எனக்கு திருமணம் செய்து கொள்ள ஆசையாகத்தான் இருக்கிறது. ஆனால் பொருத்தமான மாப்பிள்ளை அமைவது முக்கியம். திருமணம் என்பது ஒரு சாதாரண நிகழ்வாக இருக்கக்கூடாது. இரு இதயங்கள் காதலோடு இணையக்கூடியதாக இருக்க வேண்டும். அதுபோன்ற உணர்வு எனது இதயத்தில் உருவாகும்போது திருமணம் செய்து கொள்வேன்'' என தெரிவித்துள்ளார்.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!