ஐசிசி சாம்பியன் டிராபி... மெரினா, பெசண்ட்நகர் பீச்சில் நேரலையில் இந்தியா, நியூசிலாந்து இறுதிப்போட்டி!

 
இந்தியா நியூசிலாந்து

 ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரின் இறுதி போட்டி இன்று துபாயில் நடைபெற உள்ள நிலையில்  இதில் இந்தியா, நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன. இந்த தொடரில் தோல்வியை சந்திக்காத இந்திய அணி கோப்பையை வெல்லும் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்து கிடக்கின்றனர்.  இந்நிலையில், இந்த ஆட்டம் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது.

இந்தியா நியூசிலாந்து


அத்துடன் இந்தப் போட்டியில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வெல்ல இரு அணிகளும் கடுமையாகப் போராடும் என்பதால் இந்த ஆட்டம் மிகுந்த ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த சாம்பியன்ஸ் கோப்பை தொடரின் இறுதிப்போட்டியை சென்னையில் இரண்டு இடங்களில் திரையிட இருப்பதாக தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் தெரிவித்துள்ளது.அந்தவகையில், 2:30 மணிக்கு இந்த போட்டி மெரினா கடற்கரை (விவேகானந்தா மாளிகைக்கு எதிரே) மற்றும் பெசன்ட்நகர் கடற்கரை (போலீஸ் பூத் அருகில்)  இரு இடங்களில் திரையிடப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

இந்தியா நியூசிலாந்து


இந்நிகழ்வில் பொதுமக்கள் தங்களது குடும்பத்தினருடனும், நண்பர்களுடனும் போட்டியைக் கண்டு ரசிக்கும்படி  தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் கேட்டுக்கொண்டுள்ளது. இதற்கு முன், சாம்பியன்ஸ் கோப்பை தொடரின் லீக் தொடரில் இந்தியா, பாகிஸ்தான் போட்டி மெரினா, பெசன்ட்நகர் கடற்கரையில் திரையிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

 உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

From around the web