ஐஸ்கிரீமைப் புடுங்கிட்டாங்க... என் அம்மாவை ஜெயில்ல போடுங்க... 4 வயது சிறுவன் போலீசில் புகார்!

கேரள மாநிலத்தில் 4வயது மகனை தாய் கண்டித்ததால் 5 கிலோமீட்டர் தூரம் வரை நடந்தே சென்றுள்ளான். அங்கு காவல்நிலையம் என நினைத்து தீயணைப்பு நிலையத்திற்கு அந்த சிறுவன் சென்றான். அங்கு அந்த சிறுவன் தன் தாய் தன்னை கண்டித்ததால் உடனடியாக கைது செய்யும்படி அவர்களிடம் கோரிக்கை விடுத்தார். போலீசார் என்று நினைத்து தீயணைப்புத் துறையினரிடம் அவர் கோரிக்கை விடுத்த நிலையில் உடனடியாக சிறுவனின் தந்தைக்கு அவர்கள் தகவல் கொடுத்தனர்.
அந்த சிறுவனின் தந்தை உடனே அங்கு வந்து தன் மகனை அழைத்துச் சென்றார்.இதேபோல் தற்போது மீண்டும் ஒரு சம்பவம் அமெரிக்காவில் அரங்கேறியுள்ளது. அதாவது விஸ்கான்சின் மாகாணத்தில் வசித்து வரும் 4 வயது சிறுவன் தன்னுடைய தாய் ஐஸ்கிரீமை சாப்பிட்டதால் அவர் மீது போலீசில் புகார் கொடுத்துள்ளார். அந்த சிறுவன் மழலை குரலில் என் தாய் மிகவும் மோசமானவர்.
என்னுடைய ஐஸ்கிரீமை சாப்பிட்டு விட்டார். அவரை பிடித்து ஜெயிலில் போடுங்கள் எனக் கூறி புகார் அளித்துள்ளார். இதைத்தொடர்ந்து சிறுவனின் வீட்டிற்கு சென்ற போலீசார் அவனை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர். இதைத்தொடர்ந்து புதிதாக ஒரு ஐஸ்கிரீமும் வாங்கிக் கொடுத்தனர். மேலும் இது கேட்பதற்கு வேடிக்கையாக இருந்தாலும் சிறுவயதிலேயே ஒரு பிரச்சனை என்றவுடன் போலீசை அணுகிய அந்த சிறுவனின் செயலுக்கு போலீசார் பாராட்டுக்களை தெரிவித்து கொண்டனர்.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!