ICMR எச்சரிக்கை... நதிகள், வடிகால்கள் அருகே வாழ்பவர்களுக்கு புற்றுநோய் வாய்ப்பு அதிகம்!

 
புற்றுநோய்


இந்திய மருத்துவ ஆராய்ச்சி மையம் கடந்த ஆண்டு நதிகள் மற்றும் வடிகால்கள் அருகில் வாழும் மக்கள் குறித்து ஆய்வை நடத்தியது. இந்த ஆய்வு முடிவுகள் பல அதிர்ச்சிகரமான தகவல்களை வெளியிட்டுள்ளன.  அதன்படி  ICMR நடத்திய மருத்துவ ஆய்வில் நதிகள் மற்றும் திறந்த வடிகால்கள் அருகில் வாழும் மக்கள் புற்றுநோயால் பாதிக்கப்படுவதற்கான வாய்ப்பு அதிகம் இருப்பதாக தெரிவித்துள்ளது. இந்த  விவரத்தை மத்திய சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம் மூலம் மார்ச் 11, 2025 அன்று மாநிலங்களவையில் (Rajya Sabha) வெளியிடப்பட்டது.   நதிகள் மற்றும் திறந்த வடிகால்களில் உள்ள தீவிரமாக மாசுபட்ட நீர், நீண்ட காலமாக அப்படியே இருந்து வருகிறது.

ஐசிஎம்ஆர்

இதன் அருகில் வசித்து வரும் மக்கள் பாதிக்கப்படுவது தெரிந்ததும் இந்த ஆய்வு நடத்தப்பட்டது. இந்த ஆண்டு நடத்தப்பட்ட இந்த ஆய்வில் வேதியியல் கழிவுகள், கனிமங்கள் மற்றும் தொழிற்சாலை கழிவுகள் உடலில் தேங்கி, புற்றுநோயை உண்டாக்கும் என்பது தெரியவந்தது.
அதைப்போல, ஈயம் (Lead), இரும்பு (Iron), அலுமினியம் (Aluminium) போன்ற கனிமங்கள் மத்திய மாசுபாடு கட்டுப்பாட்டு வாரியம் (CPCB) அனுமதி அளித்ததை விட அதிகமாக பயன்படுத்தப்பட்டுள்ளதும் தெரியவந்திருக்கிறது. தொழிற்சாலைகள் வெளியேற்றும் ரசாயன கழிவுகள், ஆற்றில் கலப்பதன் காரணமாக மக்கள் புற்றுநோயால் பாதிக்கப்படுகிறார்கள் என்பதும்  கண்டறியப்பட்டுள்ளது.ஆய்வில் இப்படியான அதிர்ச்சி அறிக்கை வெளிவந்த உடனே மத்திய அரசு கவனத்தில் எடுத்துக்கொண்டு சில அதிரடியான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.  முதற்கட்டமாக, நாடு முழுவதும் 19 மாநில புற்றுநோய் ஆராய்ச்சி நிறுவனங்கள்  மற்றும் 20 மூன்றாம் நிலை புற்றுநோய் சிகிச்சை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் புதிய வகை கொரோனா! ஐசிஎம்ஆர் எச்சரிக்கை!
அதைப்போல, 22 புதிய அனைத்திந்திய மருத்துவ அறிவியல் நிறுவனங்களில் (AIIMS) புற்றுநோய் சிகிச்சை வசதி மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும் மாசுபாடு கட்டுப்படுத்த புதிய சட்டங்கள், தொழிற்சாலைகளுக்கான கட்டுப்பாடுகள், சுற்றுச்சூழல் பாதுகாப்பு நடவடிக்கைகளுமே மேற்கொள்ளப்பட்டும் வருகிறது. மத்திய அரசு சார்பில் இந்த அதிர்ச்சி அறிக்கையை குறிப்பிட்டு பாதுகாப்புகாக சில எச்சரிக்கையும் கொடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, மக்கள் நீர் மாசு அதிகம் உள்ள பகுதிகளில் வசிக்க வேண்டாம். தூய்மை இல்லாத குடிநீரை பயன்படுத்த வேண்டாம் எனவும், வீட்டிற்கு பக்கத்தில் தொழிற்சாலைகள் மற்றும் ஆற்றுகளில் வெளியேற்றப்படும் கழிவுகளை பார்த்தால் அதனை நீக்கம் செய்ய கோரிக்கை வைக்கும்படி வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. 

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

 உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

From around the web