தெம்பு, திராணி, தைரியமிருந்தா அண்ணா அறிவாலயத்தில் ஒரு செங்கல்லையாவது அண்ணாமலை தொட்டு பார்க்கட்டும்... அமைச்சர் சேகர்பாபு சவால்!

“தெம்பு, திராணி, தைரியமிருந்தா அண்ணா அறிவாலயத்தில் ஒரு செங்கல்லையாவது அண்ணாமலை தொட்டு பார்க்கட்டும்” என்று கொளத்தூரில் முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு நடந்த நிகழ்ச்சியின் போது அமைச்சர் பி.கே.சேகர்பாபு ஆவேசமாக பேசியுள்ளார்.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினின் 72வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை கிழக்கு மாவட்ட திமுக சார்பில் ஒரு வருடத்திற்கு தினந்தோறும் காலையில் "அன்னம் தரும் அமுதக்கரங்கள்" என்ற பெயரில் காலை உணவு தரும் திட்டத்தை நேற்று துர்கா ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
இதனைத் தொடர்ந்து இன்று 2வது நாள் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட பின்னர், நிருபர்களை சந்தித்து பேசிய இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, “தமிழக முதலமைச்சரின் பிறந்த நாளை முன்னிட்டு நேற்று ஜெகநாதன் தெருவில் காலை சிற்றுண்டி ஆயிரம் பேருக்கு வழங்கும் நிகழ்வை அண்ணியார் துவக்கி வைத்தார். 2வது நாளாக ஜிகேஎம் காலனி பகுதியில் அமுதகரங்கள் என்ற தலைப்பில் காலை சிற்றுண்டி வழங்குகிறோம். அறிவித்தபடி 365 நாட்கள் நிகழ்ச்சி நடைபெறும்.
கர்நாடகத்தில் போலீசாக இருந்தது போன்று நினைத்து கொண்டிருக்கிறார் அண்ணாமலை. அவர் கர்நாடக போலீஸ் கிடையாது. அண்ணா சாலை பகுதியில்தான் அண்ணா அறிவாலயம் அமைந்திருக்கிறது என்பதைத் தான் துணை முதலமைச்சர் கூறினார். அண்ணா அறிவாலயத்தில் இருக்கிற செங்கற்களை ஒவ்வொன்றாக பிடுங்கும் பணி நிறைவடையும் வரை நான் ஓயமாட்டேன் என சொல்லி இருந்ததற்கு தான் உதயநிதி இந்த பதிலை கூறியிருந்தார்.
இப்போதும் சொல்கிறோம். தெம்பு இருந்தால், திராணி இருந்தால், தைரியம் இருந்தால் அண்ணா சாலையில் அமைந்திருக்கிற அண்ணா அறிவாலயத்தில் ஒரு செங்கலையாவது அவர் தொட்டுப் பார்க்கட்டும்.
இந்த இயக்கம் நீர்பூத்த நெருப்பு. நேற்று பெய்த மழையில் இன்று முளைத்த காளான் அல்ல. 75 ஆண்டுகளை கடந்து திராவிட மாடல் ஆட்சியை ஏற்படுத்தி இருக்கிற இரும்பு மனிதர் முதல்வர் தலைமையில் இருக்கிற இயக்கம்.
மிசா என்ற கொடுஞ்சிறையில் கொள்கைக்காக சிறையில் இருந்தவர். அவர் வழி வருகிற லட்சோப லட்சம் தொண்டர்கள் இருக்கின்றவரை ஓர் அண்ணாமலை அல்ல, ஓராயிரம் அண்ணாமலை வந்தாலும் எதுவும் செய்ய முடியாது. கீழ்பாக்கத்தில் இருக்க வேண்டியவர்கள் எல்லாம் பிதற்றல்களோடு கூறி திரிவதை எந்நாளும் திமுக அனுமதிக்காது. இவரின் இதுபோன்ற கூற்றுகளால் இன்னும் இந்த இயக்கம் வீறுபெறும்” என்றார்.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!