தேர்தல் வந்தாலே திமுக, அதிமுகவுக்கு கச்சத்தீவு மீது “காதல்” வந்துவிடும்… சீமான் நெத்தியடி!

தமிழகத்தில் 2026ல் நடைபெற உள்ள தேர்தலுக்காக அரசியல் கட்சிகள் வியூகம் வகுத்து வருகின்றன. அந்த வகையில் மதுரை மாவட்டத்தில் நேற்று நாம் தமிழர் கட்சியின் கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் சீமான் தலைமையில் பல்வேறு மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டு ஆலோசனை வழங்கினர்.
ஆலோசனை கூட்டத்திற்கு முன்பாக பேசிய சீமான் “ தமிழகத்தில் தற்போது கட்சத்தீவு மீட்பு விவகாரம் என்பது பேசும் பொருளாக மாறிவிட்டது. இதனை நாங்கள் வித்தியாசமாக பார்க்கிறோம். அதாவது ஒருவன் கொள்ளையடிப்பது திருடுவது போன்ற குற்ற செயல்களில் தொடர்ந்து ஈடுபடும் நிலையில் திருவிழா என வந்துவிட்டால் காப்பு கட்டி விட்டு ஒரு வாரத்திற்கு விரதம் இருப்பான். அப்போது அவன் சாமி கூட ஆடுவான். அந்த சமயத்தில் அவன் செய்த குற்றங்களை நியாயப்படுத்தி புனிதம் ஆக்கி விடுவான்.
அதேபோன்றுதான் தற்போது கட்சத்தீவு மீட்பு விவகாரமும் மாறி வருகிறது. அது கோவில் திருவிழா இது தேர்தல் திருவிழா அவ்வளவுதான் வித்தியாசம். மேலும் தேர்தல் வந்துவிட்டால் திமுக, அதிமுக, பாமக மற்றும் பாஜக கட்சிகளுக்கு கச்சத்தீவு மீது காதல் வந்துவிடும் எனக் கூறியுள்ளார்.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!