‘எனக்கு கிடைக்கலைன்னா எவனுக்குமே கிடையாது’ மது போதையில் மாணவியை வெட்டிய சைக்கோ!

 
காதல்

எனக்கு நீ கிடைக்கலைன்னா... எவனுக்குமே கிடைக்க விட மாட்டேன்’ என்று மது போதையில் தேர்வெழுதி  முடித்து விட்டு வெளியே வந்த மாணவியை ஓட ஒட அரிவாளால் வெட்டிய சைக்கோ இளைஞனை, அங்கு திரண்டிருந்த பொதுமக்கள் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். உயிருக்கு பயந்து மீண்டும் பள்ளிக்குள் ஓட முயற்சித்த மாணவி, கால் தடுக்கி கீழே விழுந்த நிலையில், அரிவாளால் வெட்டப்பட்டு, மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். 

தூத்துக்குடி மாவட்டம் கீழ செக்காரகுடியைச் சேர்ந்தவர் கருப்புசாமி. இவரது மகள் தங்கமாரி. செக்காரக்குடியில் உள்ள அரசு பள்ளியில் மாணவி தங்கமாரி, 12ம் வகுப்பு படித்து வருகிறார். +2 வகுப்பின் இறுதி பொதுத் தேர்வை எழுதி முடித்து விட்டு வெளியே வந்த தங்கமாரிக்கு, வழக்கம் போல அதே பகுதியைச் சேர்ந்த சோலையப்பன் என்ற இளைஞரால் தொல்லை நிகழ்ந்தது. 

murder

மாணவி தங்கமாரியை, சோலையப்பன் ஒரு தலையாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. மாணவி காதலை ஏற்றுக் கொள்ளாத நிலையில், அன்றும் சோலையப்பனுடன் பேச மறுத்துள்ளார். மாணவி தங்கமாரி, சோலையப்பனிடம் பேச்சு கொடுக்காமல் விலகி சென்றதால், அத்திரமடைந்த சோலையப்பன், தான் கையோடு கொண்டு சென்று மறைத்து வைத்திருந்த அரிவாளால் தங்கமாரியை சரமாாரியாக தாக்கினார். இதில் தலை மற்றும் கையில் பலத்த காயமடைந்த தங்கமாரி ரத்த வெள்ளத்தில் துடி துடித்து அதே இடத்தில் கீழே விழுந்தார். 

பின்னர் அங்கிருந்து தப்பி செல்ல முயன்ற சோலையப்பனை அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் பிடித்து தட்டப்பாறை போலீசாரிடம் ஒப்படைத்தனர். படுகாயம் அடைந்த மாணவி தங்கமாரியை மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். இது தொடர்பாக தாட்டப்பாரை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Thattaparai PS

போலீசார் நடத்திய விசாரணையில் சோலையப்பன் (23), அந்த மாணவியை ஒருதலையாக காதலித்து வந்தாராம். அந்த மாணவி அங்குள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் ப்ளஸ் 2 படித்து வருகிறார். ஆகஸ்ட் மாதம் அவருக்கு 18 வயது ஆனதும், திருமணம் செய்து வைக்க பெற்றோர்கள் முடிவு செய்துள்ளார்கள்.

மாணவிக்கு திருமணம் செய்து வைக்க பெற்றோர் முடிவு செய்ததை அறிந்த சோலையப்பன் தனக்கு கிடைக்காத அந்த பெண் யாருக்கும் கிடைக்க கூடாது என்ற ஆத்திரத்தில அவரை கொலை செய்ய முடிவு செய்தாராம். இந்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web