’மேகதாது அணை கட்ட அனுமதி கொடுக்கல்லன்னா... கர்நாடகாவில் இனி தமிழ் படங்கள் ஓடாது’... வாட்டாள் நாகராஜ் எச்சரிக்கை!

 
வாட்டாள் நாகராஜ்


 
 

கர்நாடக சட்டசபையில் நேற்று மார்ச் 7ம் தேதி வெள்ளிக்கிழமை பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. அப்போது, பேசிய கர்நாடக முதல்வர் சித்தராமையா, மேகதாது அணை கட்டுவதற்கான ஆயத்தப்பணிகள் அனைத்தும் நிறைவடைந்துவிட்டன.  மத்திய அரசு அனுமதி கொடுத்தவுடன் அணை கட்டி முடிக்கப்படும் என தெரிவித்துள்ளார்.  

துரைமுருகன்

இது குறித்து  தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், “தமிழ்நாடு அரசின் ஒப்புதல் இல்லாமல், தலைகீழாக நின்றாலும் கர்நாடகா அரசால், மேகதாது அணையை கட்ட முடியாது” என பதிலடி கொடுத்துள்ளார்.அதே நேரத்தில் மேகதாது அணையை கட்ட வலியுறுத்தி தமிழக – கர்நாடக எல்லையான அத்திப்பள்ளியில் கன்னட அமைப்பினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.  

மேகதாது அணை உறுதியாக கட்டப்படும்! மீண்டும் சலசலக்கும் அரசியல் வட்டாரம்!

அந்த அமைப்பைச் சேர்ந்த வாட்டாள் நாகராஜ் , “மேகதாது அணை கட்ட தமிழ்நாடு அரசு ஒரு மாதத்திற்குள் அனுமதி வழங்க வேண்டும். இல்லையென்றால், கர்நாடகாவில் தமிழ் படங்கள் ஓடாது. காவிரி நீர் வீணாக கடலில் கலப்பதை தடுக்கவே மேகதாது அணை கேட்கிறோம்” என எச்சரிக்கை விடுத்துள்ளார்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

 உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

From around the web