யாராவது புது நபர்களை கண்டால் உடனே தகவல் கொடுங்க... மீனவர்களுக்கு அறிவிப்பு!

 
23 மீனவர்கள் சிங்களப் படையால் கைது: மீனவர் சிக்கலுக்கு நிரந்தர தீர்வு தேவை! – டாக்டர் ராமதாஸ்

பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில்  புதன்கிழமை அதிகாலை இந்திய பாதுகாப்புப் படைகள் ‘ஆபரேஷன் சிந்தூர்’ ராணுவ நடவடிக்கையைத் தொடங்கி, பாகிஸ்தானிலும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு ஜம்மு - காஷ்மீர் பகுதியிலும் உள்ள பயங்கரவாத கட்டமைப்புகளைத் தாக்கியுள்ளன. மொத்தத்தில் 9 பயங்கரவாத முகாம்கள் குறிவைத்துத் தாக்கப்பட்டன

23 மீனவர்கள் சிங்களப் படையால் கைது: மீனவர் சிக்கலுக்கு நிரந்தர தீர்வு தேவை! – டாக்டர் ராமதாஸ்

இந்தியா முழுவதும் போர் பாதுகாப்பு ஒத்திகையும் இன்று நடைபெற்றது. இதன் ஒரு பகுதியாக ராமேஸ்வரம் கடலோர பகுதி சர்வதேச கடல் எல்லைக்கு மிக அருகில் இருப்பதால், கடற்படை மற்றும் இந்திய கடலோர காவல்படை தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். ரோந்து படகுகள் மற்றும் கப்பல்கள் பாம்பன், ராமேசுவரம், தனுஷ்கோடி, அரிச்சல்முனை ஆகிய பகுதிகளில் கண்காணிப்பு பணிகள் பலப்படுத்தப்பட்டுள்ளது.

மீனவர்
 
ராமேஸ்வரம், மண்டபம், உச்சிப்புளி ஆகிய இடங்களில் உள்ள கடற்படை முகாம், கடலோர காவல்படை, ஐஎன்எஸ் பேருந்தில் பணிபுரியும் வீரர்கள் எந்த நேரத்திலும் தயார் நிலையில் இருக்க வேண்டும், விடுப்பு எடுக்காமல் பணிபுரியும்படியும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். கடலுக்கு செல்லும் நாட்டுப் படகு மீனவர்கள் கடலில் சந்தேகப்படும்படியான படகுகள், நபர்களை கண்டால் உடனடியாக மரைன் போலீஸார் மற்றும் மீன்வளத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கும்படி  அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

From around the web