மறுபடியும் மொதல்...ல இருந்தா!! மீண்டும் முகக்கவசம் கட்டாயம்!! சுகாதாரத் துறை செயலர் எச்சரிக்கை!!

இந்தியா முழுவதும் கடந்த சில வாரங்களாக இன்புளூயன்சா வைரஸ் காய்ச்சல் தீவிரமாக பரவி வருகிறது. இதனைக் கட்டுப்படுத்த தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும், தடுப்பு முறைகளையும் மத்திய மாநில அரசுகள் மேற்கொண்டு வருகின்றன. இது குறித்து மத்திய சுகாதாரத்துறை செயலாளர் அனைத்து மாநில தலைமை செயலாளர் மற்றும் சுகாதாரத்துறை செயாளர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் இன்புளூயன்சா வைரஸ் காய்ச்சல் ஒவ்வொரு ஆண்டும் பருவநிலை மாறுபடும் காலங்களில் ஏற்படுவது வழக்கமான ஒன்று தான்.
இந்தாண்டு பருவநிலை மாறுபாடு, ஒரு அரங்கிற்குள் அதிக மக்கள் ஒன்றுகூடுவது, மக்களின் பழக்கவழக்கங்கள் காரணங்களால், இந்த பரவல் வேகமாக பரவி வருவதாக கூறப்படுகிறது. குறிப்பாக H3N2, H1N1, அடினோ வைரஸ் போன்ற வைரஸ் காய்ச்சல் அதிகரித்து வருவது மக்கள் மனதில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்த முறையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள அறிவுறுத்தியுள்ளது. அதன்படி முகக்கவசம் அணிவது, சமூக இடைவெளி, அடிக்கடி கைகளை கழுவுதல் என சுகாதார நடைமுறைகளை பொதுமக்கள் கடைபிடிப்பது குறித்து அவர்களுக்கு விழிப்புர்ணர்வை ஏற்படுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுளள்து.
வைரஸால் பாதிக்கப்பட்டுள்ள மற்றும் மூத்த குடிமக்கள் அதிக பாதிப்புக்குள்ளாவதற்கான வாய்ப்புகள் இருப்பதாகவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மருத்துவமனைகளில் இந்த நோய் தொடர்பான அத்தியாவசிய மருந்துகள், மருத்துவசாதனங்கள், ஆக்சிஜன், போதிய மனித வளம் போன்றவை இருப்பது குறித்து ஆய்வு செய்ய வேண்டும். கொரோனா பெருந்தொற்று குறைந்திருந்தாலும் கூட ஒரு சில மாநிலங்களில் மீண்டும் நோய் தொற்று அதிகரித்திருப்பது கவலை அளிக்கும் விஷயம். அதனை முறையாக அணுகி தடுப்பூசி செலுத்துவதை துரிதப்படுத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
2023 இந்த 6 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்! பயன்படுத்திக்கோங்க