ரூ.5 கோடி நஷ்டஈடு கேட்டு 'குட் பேட் அக்லி' தயாரிப்பாளருக்கு இசைஞானி இளையராஜா நோட்டீஸ்!

 
இளையராஜா அஜித்

ரூ.5 கோடி நஷ்ட ஈடு கேட்டு, ‘குட் பேட் அக்லி’ பட தயாரிப்பாளருக்கு இசைஞானி இளையராஜா வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அஜித், த்ரிஷா நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கியுள்ள 'குட் பேட் அக்லி' திரைப்படம் கடந்த 10ம் தேதி வெளியான நிலையில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரித்துள்ள இந்த படத்தில், இளையராஜா இசையில் வெளியான 'ஒத்த ரூவா தாரேன்...', 'இளமை இதோ இதோ...', 'என் ஜோடி மஞ்சக்குருவி' ஆகிய பாடல்கள் முன் அனுமதி பெறாமல் பயன்படுத்தப்பட்டிருந்தது. 

 குட் பேட் அக்லி புரோமோ

இந்நிலையில் தனது பாடல்களை முன் அனுமதியின்றி வணிக நோக்கில் பயன்படுத்தியதாகக் கூறி இளையராஜா தரப்பில் அவரது வழக்கறிஞர் சரவணன், 'குட் பேட் அக்லி' படத்தின் தயாரிப்பாளருக்கு ரூ.5 கோடி நஷ்டஈடு கேட்டு நோட்டீஸ் அனுப்பி உள்ளார்.

குட் பேட் அக்லி

இது குறித்து அனுப்பட்ட நோட்டீஸில், ஒருவார காலத்துக்குள் சம்பந்தப்பட்ட பாடல்களைப் படத்தில் இருந்து நீக்க வேண்டும் என்றும் பாடல்களைப் பயன்படுத்தியதற்காக 7 நாட்களுக்குள் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

From around the web