குடிநீர் கேன்களை பொறுத்தவரை 30 முறை மட்டுமே மறுசுழற்சி மூலம் குடிநீர் நிரப்பப்பட வேண்டும்.. உணவு பாதுகாப்பு துறை எச்சரிக்கை!

 
 குடிநீர் கேன்


தமிழகத்தின் பல பகுதியில் கோடை வெயில் கொளுத்தி வருகிறது. வெயிலின்  காரணமாக கேன் வாட்டர் விற்பனை  அதிகரித்துள்ள நிலையில் கேன் வாட்டர் குடிநீரின் தரத்தை முழுமையாக பின்பற்றும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இது குறித்து உணவு பாதுகாப்பு துறை  அடைக்கப்பட்ட குடிநீரில் உற்பத்தி மற்றும் காலாவதி தேதி அச்சிடப்பட வேண்டும் என்றும் குடிநீர் தயாரிப்பு நிறுவனங்களுக்கு உணவு பாதுகாப்பு துறை உத்தரவிட்டுள்ளது. அதே போல் கால்சியம் அளவை ஒரு லிட்டர் குடிநீரில் 10 முதல் 75 மில்லிகிராம் என்ற அளவிலும், மெக்னீசியத்தின் அளவை 1 லிட்டர் குடிநீரில் 5 முதல் 30 மில்லிகிராம் என்ற அளவிலும் கடைபிடிப்பது உட்பட  வழிகாட்டுதல்களை கட்டாயம் பின்பற்ற வேண்டியது அவசியமாகிறது.   

குடிநீர் கேன்களை பொறுத்தவரை  30 முறை மட்டுமே மறுசுழற்சி செய்து குடிநீரை நிரப்பி பயன்படுத்த வேண்டும் எனவும் கேன்களின் நிறம் மாறிடும் பட்சத்தில் மீண்டும், மீண்டும் குடிநீரை நிரப்பி விற்பனை செய்வதை அறவே தவிர்க்க வேண்டும் எனவும் தொடர்ந்து அவ்வாறு செய்யும் பட்சத்தில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகளின் சோதனையின் போது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

From around the web