பகீர் வீடியோ!! நடுவானில் பரபரப்பு! 2 விமானங்கள் அருகருகே மோதிக்கொள்வதைப் போல சென்ற துயரம்! பெரும் விபத்து தவிர்ப்பு!
டெல்லியில் இருந்து நேபாள தலைநகர் காத்மண்டு நோக்கி, கடந்த மார்ச் 24ஆம் தேதி அன்று ஏர் இந்தியா விமானம் ஒன்று பயணிகளுடன் பறந்து சென்றது. அப்போது மலேசியாவின் கோலாலம்பூரில் இருந்து நேபாளம் நோக்கி வந்த நேபாள் ஏர்லைன்ஸ் விமானமும் அதே வழியில் வந்துள்ளது.
இந்த இரு விமானங்களும் ஒரு கட்டத்தில் அருகருகே பறக்கத் தொடங்கியதால் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டது. அதாவது 19,000 அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்த ஏர் இந்தியா விமானம் கீழே இறங்கிய நிலையில் பறக்க தொடங்கியது. அந்த வேளையில், நேபாள விமானம் 15,000 அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்தது.
Air Traffic Controllers (ATCs) of Tribhuvan International Airport involved in traffic conflict incident (between Air India and Nepal Airlines on 24th March 2023) have been removed from active control position until further notice. pic.twitter.com/enxd0WrteZ
— Civil Aviation Authority of Nepal (@hello_CAANepal) March 26, 2023
இரண்டு விமானங்களும் குறுகிய இடைவெளியில் பறந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதனை காத்மண்டு விமான கட்டுப்பாட்டு அறை அதிகாரிகள் கவனித்தனர். உடனடியாக நேபாள விமானத்திற்கு அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்தனர். இதனையடுத்து சுதாகரித்த நேபாள விமான விமானி, விமானத்தை 15,000 அடி உயரத்தில் இருந்து கீழே இறங்கி 7,000 அடி உயரத்தில் இயக்கினார்.
உரிய நேரத்தில் கவனிக்கப்பட்டதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. எனினும் நேபாள விமான போக்குவரத்து ஒழுங்குமுறை ஆணையம் விசாரணைக்கு உத்தரவிட்டது. மேலும், திர்புவன் சர்வதேச விமான கட்டுப்பாட்டு அறை ஊழியர்களை 3 பேரை சஸ்பெண்ட் செய்தது. மேலும் இது தொடர்பாக விரிவான விசாரணை நடத்த 3 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. ஏர் இந்தியா தரப்பு இது குறித்து எந்த அதிகாரப்பூர்வ கருத்தும் தெரிவிக்கவில்லை.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!