இந்தியா அதிரடி... பாகிஸ்தானின் 16 யூடியூப் சேனல்களுக்கு தடை!

 
பாகிஸ்தானின் 16 யூடியூப் சேனல்களுக்கு தடை
இந்தியாவில் காஷ்மீர் மாநிலத்தில் ஏப்ரல் 22ம் தேதி நடத்தப்பட்ட பஹல்காம் தாக்குதலால் 26 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். இச்சம்பவத்துக்கு உலகம் முழுவதும் இருந்து கண்டனங்கள் எழுந்து வருகின்றன. இதனையடுத்து இந்தியா சிந்து நதி நீருக்கு தடை உட்பட  பாகிஸ்தானுக்கு எதிராக பல்வேறு நடவடிக்கைகளை   மேற்கொண்டு வருகின்றது.

பாகிஸ்தானின் 16 யூடியூப் சேனல்களுக்கு தடை
இந்நிலையில், இந்திய ராணுவம் மற்றும் பாதுகாப்பு அமைப்புகளுக்கு எதிராக வெறுப்பைத் தூண்டும் வகையில் பாகிஸ்தான் ஊடகங்கள் தவறான செய்திகளை பரப்பி வருவதாக மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.  இந்த குற்றச்சாட்டை தொடர்ந்து, ஜியோ நியூஸ், சமா டிவி, போல் நியூஸ், ஜிஎன்என் போன்ற பிரபல செய்தி நிறுவனங்களின் யூடியூப் சேனல்களின் ஒளிபரப்புக்கு இந்தியாவில் தடை விதிக்கப்பட்டுள்ளது. 

பாகிஸ்தானின் 16 யூடியூப் சேனல்களுக்கு தடை

அதேபோல், இர்ஷாத் பாட்டி, அஸ்மா ஷிராசி, உமர் சீமா மற்றும் முனீப் ஃபரூக் போன்ற பத்திரிகையாளர்களின் யூடியூப் சேனல்களுக்கு மத்திய அரசு  தடை விதித்துள்ளது.  இந்த 16 யூடியூப் சேனல்களின் மொத்த பின்தொடர்பவர்கள் எண்ணிக்கை 6.30 கோடி என்பது குறிப்பிடத்தக்கது.  
இந்த சேனல்களை இந்திய பயனர்கள் அணுகினால், "தேசிய பாதுகாப்பு அல்லது பொது ஒழுங்கு தொடர்பான அரசாங்கத்தின் உத்தரவின் காரணமாக இந்த உள்ளடக்கம் தற்போது இந்த நாட்டில் கிடைக்கவில்லை" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

From around the web