2047க்கு முன் இந்தியா வல்லரசாகும் ... இஸ்ரோ தலைவர் வி.நாராயணன் திட்டவட்டம்!

 
இஸ்ரோ தலைவர் வி.நாராயணன்


 
 
தமிழகத்தில் கன்னியாகுமரி மாவட்டத்தில்  அஞ்சுகிராமம் பகுதியில்  தனியார் பொறியியல் கல்லூரி பட்டமளிப்பு விழாவில் இஸ்ரோ தலைவர் நாராயணன் கலந்து கொண்டார். இதைத் தொடர்ந்து பேசிய அவர்  ” அனைத்து துறைகளிலும் பெண்கள் முன்னேற வேண்டும். ஆண் பெண் பாகுபாடு பார்க்காமல் திறமையை பார்த்து வாய்ப்பு வழங்கப்படும் நிறுவனம் இஸ்ரோ. சந்திரயான் 4 திட்டம் மூலம் நிலவில் தரை இறங்க அங்கிருந்து தாது மற்றும் கனிமங்களை எடுத்து வந்து ஆராய்ச்சி செய்ய உள்ளோம். 9200 கிலோ எடை கொண்ட சந்திரயான் 4 இரண்டு ராக்கெட் மூலம் செலுத்தப்பட உள்ளது, 2028ல் திட்டம் செயல்படுத்தப்படும். அதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது.

இஸ்ரோ
சர்வதேச கூட்டு முயற்சி என்பது தேவை தான், சிந்தட்டிக் அப்ரேச்சர் என்ற செயற்கைகோள் அமெரிக்கா மற்றும் இந்தியாவின் கூட்டு முயற்சியால் தயாராகி வருகிறது, ஜி20 நாடுகளுக்கான ஜி20 செயற்கைகோளை தயார் செய்ய உள்ளோம். இதற்கான பணிகள் நமது தலைமையில் நடைபெற்று வருகிறது. மீனவர்களுக்கு என்று பிரத்யேக செயலி உருவாக்கப்பட்டு அது பயன்பாட்டில் உள்ளது, இதில் சர்வதேச எல்லை எங்கு உள்ளது, மீன்கள் எங்கு அதிக அளவில் உள்ளது,

இஸ்ரோ

அதேபோல் வானிலை எப்படி உள்ளது போன்ற பல தகவல்கள் நேரடியாக தெரிவிக்கப்பட்டு வருகிறது. இதனை மீனவ மக்கள் அதிக அளவில் பயன்படுத்த வேண்டும். நிலவில் 8 விதமான தாதுகள் மற்றும் கனிமங்கள் உள்ளது என்பதை கண்டுபிடித்துள்ளோம். சுதந்திரம் அடைந்து 100 ஆண்டுகளை கடக்கும் முன் இந்தியா வல்லரசு ஆகும் அதற்கான அனைத்து வேலைகளையும் இஸ்ரோ நிச்சயம் செய்யும் என கூறினார்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

 உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

From around the web