உலக துப்பாக்கி சுடுதல்... இந்திய வீரர் குர்பிரீத் சிங் வெள்ளிப் பதக்கம் வென்றார்!

 
குர்பிரீத் சிங்
 

எகிப்து தலைநகரான கெய்ரோவில் நடைபெற்ற உலக துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய வீரர் குர்பிரீத் சிங் ஆண்களுக்கான 25 மீட்டர் சென்டர் பயர் பிஸ்டல் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்றார்.

இந்த வெள்ளி பதக்கம் குர்பிரீத் சிங்குக்கு உலக சாம்பியன்ஷிப் போட்டியில் வென்ற இரண்டாவது பதக்கம் ஆகும். 37 வயதான இவர் பஞ்சாபை சேர்ந்தவர்; முந்தைய வெள்ளி பதக்கத்தை அவர் 2018-ம் ஆண்டிலும் வென்றிருந்தார். இந்த போட்டியில் உக்ரைன் வீரர் பாவ்லோ கொரோஸ்டிலோவ் 584 புள்ளிகளுடன் தங்கப்பதக்கத்திற்கு மிகவும் அருகில் இருந்தார், ஆனால் 10 புள்ளி இலக்கின் மிக நெருக்கமான சுடுதலின் காரணமாக வெள்ளிப்பதக்கத்தில் திருப்தி கண்டார். பிரான்ஸ் வீரர் யான் பியரி லூயிஸ் 583 புள்ளிகளுடன் வெண்கலப்பதக்கத்தை வென்றார்.

இந்த போட்டியின் இறுதி மதிப்பீட்டில் இந்தியா 3 தங்கம், 6 வெள்ளி, 4 வெண்கலம் உள்ளிட்ட 13 பதக்கங்களுடன் மூன்றாம் இடம் பெற்றுள்ளது. சீனா 21 பதக்கங்களுடன் முதலிடம், தென்கொரியா 14 பதக்கங்களுடன் இரண்டாம் இடம் பெற்றது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!