அமெரிக்காவில் தீ விபத்தில் சிக்கி இந்திய மாணவி உயிரிழப்பு!

 
அமெரிக்க மாணவி தீ

அமெரிக்காவின் நியூயார்க் மாகாணம் அல்பெனி நகரில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பில் ஏற்பட்ட பயங்கரத் தீ விபத்தில் சிக்கி, தெலுங்கானா மாநிலத்தைச் சேர்ந்த முதுகலை மாணவி ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

தீ

தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் அருகே ஜோடிமெட்லா பகுதியைச் சேர்ந்த சஹாஜா உடுமலா (24), அமெரிக்காவின் நியூயார்க் மாகாணம் அல்பெனி நகரில் உள்ள பல்கலைக்கழகத்தில் முதுகலை பட்டப்படிப்பு படித்து வந்தார். அவர் வெஸ்ட் அவன்யூவில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பில் சக மாணவிகளுடன் வாடகைக்குத் தங்கி இருந்துள்ளார். இந்த நிலையில், நேற்று முன்தினம் காலை சஹாஜா தங்கி இருந்த வீட்டில் பயங்கரத் தீ விபத்து ஏற்பட்டது.

பள்ளி மானவி தற்கொலை

இது குறித்து தகவலறிந்து விரைந்து சென்ற மீட்புக் குழுவினர் தீ விபத்தில் சிக்கியிருந்தவர்களை மீட்கப் போராடினர். இந்த விபத்தில் சஹாஜாவுக்கு 90 சதவீதம் படுகாயங்கள் ஏற்பட்டன. சக மாணவிகளுக்கு லேசான காயங்கள் ஏற்பட்டன. உடனடியாக அனைவரும் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சஹாஜா சிகிச்சை பலனின்றி நேற்று (வெள்ளிக்கிழமை) உயிரிழந்தார். சஹாஜாவின் உடலை இந்தியாவுக்குக் கொண்டு வர வெளியுறவுத்துறை அமைச்சகம் தற்போது முயற்சி எடுத்து வருகிறது. இந்தத் தீ விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!