தொடரும் சோகம்... மோடி அமெரிக்காவில் இருக்கும் போதே 119 இந்தியர்கள் நாடுகடத்தல் !

 
மோடி ட்ரம்ப்


இந்திய பிரதமர்  மோடி அமெரிக்காவுக்கு பயணம் மேற்கொண்டிருக்கும் நிலையில், அங்கிருந்து சட்டவிரோதமாக குடியேறிய இந்தியர்கள் நாடு கடத்தப்பட்டு இருப்பது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.  அடுத்த கட்டமாக 119 இந்தியர்களுடன் புறப்பட்டுள்ள இரண்டு ராணுவ விமானங்கள், நாளை பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் விமான நிலையத்தில் தரையிறங்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.  
அமெரிக்க அதிபராக ஜனவரியில் டிரம்ப்  பொறுப்பேற்றதும்  எல்லைப் பாதுகாப்பு சட்டத்தை கடுமையாக்கியுள்ளார்.

இந்தியர்கள்

அதன் ஒரு பகுதியாக , சட்டவிரோதமாக அமெரிக்காவுக்கு குடிபெயர்ந்த பல்வேறு நாட்டினரை நாடு கடத்தி வருகிறார். முதல்கட்டமாக அமெரிக்காவில் இருந்து நாடு கடத்தப்பட்ட 104 இந்தியர்கள், கடந்த வாரம் அமிர்தசரஸ் விமான நிலையம் வந்தடைந்தனர். சுமார் 40 மணிநேர பயணத்தின்போது, கை மற்றும் கால்கள் கட்டப்பட்ட நிலையில், கைதிகளை போன்று மிகக் கொடூரமாக அவர்கள் நாடு கடத்தப்பட்டதாக  வேதனை தெரிவித்திருந்தனர். இதனை கண்டித்து  எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்த நிலையில், இது வழக்கமான நடைமுறைதான் என்று வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் விளக்கம் அளித்திருந்தார்.பிரதமர் மோடி இதுவரை எந்த கருத்தும் தெரிவிக்காமல் இருந்த நிலையில், அமெரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.இந்த பயணத்தின்போது, அமெரிக்க அதிபர் டிரம்ப்பிடம் கை விலங்குடன் நாடு கடத்துவது குறித்து பேச்சுவார்த்தை நடத்துவார் என எதிர்பார்ப்பு எழுந்தது.

இந்தியர்கள்

ஆனால், பிரதமர் மோடி அமெரிக்காவில் இருக்கும் போதே மேலும் 119 இந்தியர்களை 2 விமானங்கள் மூலம் நாடு கடத்தியுள்ளனர். , ஒரு விமானம் சனிக்கிழமையும் மற்றொரு விமானம் ஞாயிற்றுக் கிழமையும் அமிர்தசரஸ் விமான நிலையம் வந்தடையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அமெரிக்க அதிபர் டிரம்ப்புடனான சந்திப்பிற்கு பிறகு பிரதமர் மோடி சட்டவிரோதமாக குடியேறியவர்களை திரும்பப் பெறத் தயாராக இருப்பதாக தெரிவித்தார்.முதல்கட்டமாக நாடு கடத்தப்பட்டவர்களில் பஞ்சாப், உத்தரப் பிரதேசம், ஹரியானா, குஜராத், மகாராஷ்டிரம் மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் இருந்த நிலையில், விமானம் ஏன் அமிர்தசரஸில் தரையிறக்கப்பட்டது என மாநில அரசு கேள்வி எழுப்பியிருந்தது.  மேலும், அடுத்த இரு விமானங்களும் பஞ்சாபில் தரையிறங்கலாம் எனத் தெரிவிக்கப்பட்ட நிலையில் இத்தகவலுக்கு மாநில அரசு அதிருப்தி தெரிவித்துள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

 உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?