இந்தியா - பாகிஸ்தான் மோதல் விரைவில் முடிவுக்கு வந்து விடும்... ட்ரம்ப் கருத்து!

இந்தியாவில் பஹல்காம் தாக்குதலைத் தொடர்ந்து இரு நாடுகளுக்கும் இடையே பதற்றம் நிலவி வருகிறது. இந்நிலையில் எல்லையில் தீவிரவாத முகாம்களை குறிவைத்து இந்தியா இன்று ஆபரேஷன் சிந்தூர் என்ற ஆபரேஷனை நடத்தியுள்ளது. இந்தியாவின் இந்த அதிரடி ஆபரேஷன் தொடர்பாக அமெரிக்க அதிபர் டிரம்ப் சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்துள்ளார். கடந்த மாதம் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர்.
அங்கு பைசரன் பள்ளத்தாக்கில் இயற்கை அழகை ரசிக்க வந்த சுற்றுலாப் பயணிகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இந்தத் தாக்குதலில் 26 அப்பாவி பொதுமக்கள் கொல்லப்பட்டனர். காஷ்மீரில் சமீப காலங்களில் நடந்த மிக மோசமான தாக்குதலாக இது கருதப்படுகிறது.
இந்தத் தாக்குதலுக்கு பாகிஸ்தான் ஆதரவு இருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளது. இந்தத் தாக்குதலைத் தொடர்ந்து பாகிஸ்தான் மீது இந்தியா பல்வேறு நடவடிக்கைகளை எடுத்திருந்தது. விசா ரத்து, வான்வெளி மூடல் என்று பல்வேறு நடவடிக்கைகளை எடுத்திருந்தது. அதேநேரம் அங்கு இறங்கி அடிக்க வேண்டும் என்றும் பாகிஸ்தான் தீவிரவாதிகளைக் காலி செய்ய வேண்டும் என்றும் பலரும் கோரிக்கை விடுத்து வந்தனர்.
இதற்கிடையே இந்திய ராணுவம் அதிகாலை 3 மணிக்கு ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலை நடத்தியுள்ளது. பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள 9 இடங்களைக் குறிவைத்துத் தாக்குதல் நடத்தியுள்ளனர். சரியாக அங்குள்ள தீவிரவாத முகாம்கள் மீது இந்தியா தாக்குதல் நடத்தி உள்ளது. இதில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர்.
இந்தத் தாக்குதல் தொடர்பாக அமெரிக்க அதிபர் டிரம்ப் பாகிஸ்தான் மீதான தாக்குதல் சீக்கிரம் முடிந்துவிடும் என நினைப்பதாக அதிபர் டிரம்ப் கூறியிருக்கிறார். சமீப காலங்களில் நடப்பத்தை வைத்துப் பார்த்தால் ஏதோ நடக்கப் போகிறது என்பதை அறிந்திருந்தோம் . "எனக்கு இப்போது தான் தாக்குதல் குறித்துத் தெரிந்தது. ஓவல் மைதானத்தின் வாசலில் வந்து கொண்டிருந்த போது தான் இது குறித்துக் கேள்விப்பட்டோம். கடந்த காலத்தில் நடந்ததை வைத்துப் பார்த்தாலே ஏதோ நடக்கப் போகிறது என்பதை மக்கள் அறிந்திருப்பார்கள்
இரு தரப்பிற்கும் இடையே நீண்ட காலமாகவே மோதல் போக்கு இருந்து வருகிறது. கிட்டதட்ட 70 ஆண்டுகளுக்கு மேலாக மோதல் இருந்து வருகிறது" என்றார்.
இரு நாடுகளுக்கும் எதாவது சொல்ல விரும்புகிறார்களா எனச் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு டிரம்ப், "எதுவும் சொல்ல விரும்பவில்லை. ஆனால், இந்த மோதல் விரைவில் முடிவுக்கு வந்துவிடும் என்று நம்புகிறேன்" என்று மட்டும் அவர் குறிப்பிட்டார்.
இந்தத் தாக்குதல் சர்வதேச அளவில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே இந்தத் தாக்குதல் குறித்து இந்திய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் மார்கோ ரூபியோவிடம் விளக்கம் அளித்துள்ளார்.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!