இந்தியாவின் முதல் ஆப்பிள் ஸ்டோர்!! மொபைலை வாங்க வரிசையில் காத்திருந்த வாடிக்கையாளர்கள்!!
இந்தியாவில் ஆப்பிள் நிறுவனத்தின் விற்பனையகம் முதன் முறையாக மும்பையில் இன்று திறக்கப்பட்டுள்ளது. ஆப்பிள் நிறுவனம் கடந்த 25 ஆண்டுகளாக இந்தியாவுடன் வர்த்தகம் செய்துவருகிறது. ஆனால் இதுவரை நேரடி விற்பனையகம் அமையவேஇல்லை எனலாம். இந்த 25 ஆண்டுகால வர்த்தகத்தை கொண்டாடும் வகையில் ஆப்பிள் நிறுவனம் நேரடி விற்பனையகத்தை தொடங்கியுள்ளது.
இந்தியாவின் முதல் ஆப்பிள் நேரடி விற்பனையகம்!! pic.twitter.com/o7T9T7a9I6
— Dina Maalai (@DinaMaalai) April 18, 2023
இந்த விற்பனையகத்தைஆப்பிள் நிறுவனத்தின் சிஇஓ டிம் கும் திறந்து வைத்துள்ளார். இந்த பிரம்மாண்ட திறப்பு விழாவில் இசையமைப்பாளர் ஏ.ஆர். ரகுமான், இயக்குநர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த், நடிகை மாதுரி தீட்சித் உட்பட பல திரையுலக பிரபலங்கள், தலைவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
இன்று முதல் விற்பனையகம் திறக்கப்பட்ட நிலையில் நூற்றுக்கணக்கான வாடிக்கையாளர்கள் மொபைலை வாங்கி செல்ல வரிசையில் காத்துக் கிடக்கின்றனர். இதனைத் தொடர்ந்து 2வது விற்பனையகத்தை வியாழக்கிழமை தலைநகர் டெல்லியில் திறக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த விற்பனையகத்தின் மூலம் வாடிக்கையாளர்களுக்கு சிறப்பான சேவைகள் வழங்கப்படும் என ஆப்பிள் நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!