மே 10 வரை இண்டிகோ விமானங்கள் ரத்து... ஆபரேஷன் சிந்தூர்!

ஜம்மு காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22ம் தேதி பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கி சூட்டில் 26 சுற்றுலா பயணிகள் பலியாகினர். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்தியா ஆபரேஷன் சிந்தூர் என்ற தாக்குதலை நடத்தி பயங்கரவாதிகளின் முகாம்களை குறி வைத்து அழித்தது.
இந்தியாவின் முக்கிய நகரங்களை குறி வைத்து நேற்று இரவு பாகிஸ்தான் தாக்குதல் நடத்தியது. பாகிஸ்தான் தாக்குதலை இந்தியா முறியடித்தது. பாகிஸ்தான் எல்லைக்கு அருகே உள்ள பஞ்சாப், ராஜஸ்தான், குஜராத் உட்பட பல மாநிலங்களிலும், காஷ்மீரிலும் 24 விமான நிலையங்கள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.
பல விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. நாடு முழுவதும் இருக்கும் விமான நிலையங்களில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. பயணிகள் 3 மணி நேரத்திற்கு முன்பே விமான நிலையத்திற்கு வர அறிவுறுத்தப்பட்டுள்ளன.
இந்நிலையில் ஸ்ரீநகர், ஜம்மு, அமிர்தசரஸ், லே, சண்டிகர், தர்மஷாலா, பிகானர், ஜோத்பூர், கிஷன்கர், ராஜ்கோட் செல்லும் இண்டிகோ விமானங்கள் மே 10 வரை ரத்து செய்யப்பட்டு இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!