கைக்குழந்தை, சிறுவன், தாய் மூவரும் கழுத்தறுத்துக் கொலை!! பயங்கரம்!!

 
வளர்மதி

கள்ளக்குறிச்சி மாவட்டம் ஏமப்பேர் நரிமேடு காட்டுக்கொட்டாய் பகுதியில் வசித்து வருபவர்  மணிகண்டன். இவர் மினி லாரியில் ஊர், ஊராக  காய்கறி வியாபாரம் செய்து வருபவர்.  இவரது மனைவி 37 வயது வளர்மதி.இவர்களுக்கு 11 வயதில் தமிழரசன்  என்ற மகனும், கேசவன் என்ற 8 மாத ஆண் குழந்தையும் இருந்தது. கேசவன் பிறப்பதற்கு முன்பே  அதாவது வளர்மதி கர்ப்பமாக இருந்தபோதே, மணிகண்டன் சாலை விபத்தில் இறந்து விட்டார்.

வளர்மதி
இந்நிலையில், நீண்ட நேரமாகியும் நேற்று வளர்மதி வீட்டில் இருந்து யாரும் வெளியே வரவே இல்லை.   வீட்டில் இருந்து மாலையில் துர்நாற்றம் வீசியது. இதனால் சந்தேகமடைந்த அக்கம், பக்கத்தினர் உடனடியாக காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் வீட்டின் கதவை தட்டினர். ஆனால்  சிமெண்டு ஷீட்டால் கட்டப்பட்ட அவரது வீட்டின் கதவு வெளிப்புறமாக தாழ்ப்பாள் போடப்பட்டு இருந்தது.
 கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது வளர்மதி, அவரது மகன் தமிழரசன், 8 மாத கைக்குழந்தை கேசவன் ஆகிய 3 பேரும் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில், ரத்த வெள்ளத்தில் உயிரிழந்த நிலையில் கிடந்தனர். அவர்களது உடல்கள் அழுகிய நிலையில் காணப்பட்டது. . 2 நாட்களுக்கு முன்பே அவர்கள் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. இந்நிலையில் உயிரிழந்த 3பேரின் உடல்களையும் காவல்துறையினர்  பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

ஆம்புலன்ஸ்

இந்நிலையில் வீட்டை சுற்றி பார்த்த போது, அங்கே வளர்மதி ஆசை ஆசையாய் வளர்த்த கன்றுக்குட்டியும்  கத்தியால் குத்தப்பட்டு இறந்து கிடந்தது. 10 கோழிக்குஞ்சுகள் வாளி தண்ணீருக்குள் மூழ்கடித்து சாகடிக்கப்பட்டு கிடந்தது. அதில் நாய் கட்டப்பட்டும், பசு மாடு உயிருடனும் இருந்தது. தொடர்ந்து போலீசார் பல்வேறு கோணங்களில் தீவிர விசாரணை நடத்தப்பட்டது. இதுவரை  கொலைக்கான காரணம் குறித்து தகவல் எதுவும் தெரிவிக்கப்படவில்லை.


உயிரிழந்த 3 பேர் உடல்களிலும் மிளகாய் பொடியை தூவி விட்டு சென்றுள்ளனர். அதற்கு அடையாளமாக அவர்களது உடல்களிலும், வீட்டிலும் ஆங்காங்கே மிளகாய் பொடிகள் சிதறி கிடந்தன. தொடர்ந்து கைரேகை நிபுணர்கள், தடய அறிவியல் சோதனை நிபுணர்கள் சம்பவ இடத்திற்கு வந்து, முக்கிய தடயங்களை சேகரித்தனர். மேலும் மோப்ப நாய் ராக்கி சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்து. அந்த நாய் வீட்டை சுற்றி, சுற்றி வந்து பார்த்து ஒரே இடத்தில் நின்றுவிட்டது.  இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்யப்பட்டு தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.  2 குழந்தைகளோடு தாயை கொலை செய்தது யார்?, இந்த கொலைக்கான காரணம் என்ன? என்பது குறித்த விசாரணையும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.  2 குழந்தைகளும், தாயும் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

கொலை செய்யப்பட்ட வளர்மதி, மணிகண்டனோடு கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே பாலக்கொல்லையில் இருந்து வீட்டுமனை வாங்கி, அதில் வீடு கட்டி குடியிருந்து வந்தார். இந்த வீட்டு மனை தொடர்பாக அப்பகுதியில் வசித்துவரும் ஒருவருடன் அடிக்கடி பிரச்சனையும் ஏற்பட்டு வந்தது. வளர்மதியுடன் சேர்ந்து வியாபாரம் செய்த டிரைவரும், கடந்த 3 நாட்களாக வரவில்லை. இத்தனை பேரையும் காவல்துறையினர் சந்தேக வளையத்திற்குள் கொண்டு வந்துள்ளனர். 

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web