கலக்கத்தில் இன்போசிஸ் ஊழியர்கள்... மேலும் 240 பேர் பணிநீக்கம்!

இந்தியாவின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்களில் ஒன்று இன்போசிஸ், இந்நிறுவனங்களின் முக்கிய நகரங்களில் பணிபுரிந்து வரும் சுமார் 240 பயிற்சி ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஏற்கனவே பிப்ரவரியில் 300 பயிற்சி ஊழியர்களை பணிநீக்கம் செய்திருந்த நிலையில், தற்போது மீண்டும் 240 பயிற்சி ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டு இருப்பது ஊழியர்களிடையே பெரும் கவலையையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. பணி நீக்கம் செய்யப்பட்ட பயிற்சி ஊழியர்களுக்கு, ஏப்ரல் 18ம் தேதி அனுப்பப்பட்ட மின்னஞ்சலில், உள்மதிப்பீட்டுத் தேர்வுகளில் தேர்ச்சி பெறத் தவறியதால், பணி நீக்கம் செய்யப்படுகிறீர்கள் என விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
பொதுவான அடித்தள பயிற்சி திட்டத்தின் கீழ், நீங்கள் நிறுவனத்தின் தகுதிபெறும் திறனைக் கொண்டிருக்கவில்லை. தகுதி பெறுவதற்கு கூடுதலாக நேரம் ஒதுக்கப்பட்டும், சந்தேகங்களுக்குத் தீர்வு காணும் தேர்வு, பலகட்டத் தேர்வுகளிலும் மூன்று முறை பங்கேற்றும் தேர்ச்சி பெறத் தவறிவிட்டதாகவும், அதனால், இந்த பயிற்சிப் பணியை உங்களால் தொடர முடியாது என்றும் அந்த மின்னஞ்சலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிறுவனத்தின் பயிற்சி முடிந்து. சில தொடர்ச்சியான உள் தேர்வுகளில், இவர்கள் தோல்வியடைந்ததால் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். மீண்டும் பயிற்சி ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டிருப்பது, தற்போது கல்லூரிகளில் படித்து வளாகத் தேர்வுக்காகக் காத்திருக்கும் இளைஞர்களுக்குப் பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!