அமைச்சர் உதயநிதி விழாவில் தேசிய கீதம் அவமதிப்பு! சப்-இன்ஸ்பெக்டர் மீது பாய்ந்த நடவடிக்கை!!

 
சிவபிரகாசம்

தேசிய கீதத்தை அவமதித்த புகாரில் சிக்கிய சப்-இன்ஸ்பெக்டர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். 

நாமக்கல்லில் கடந்த 28ம் தேதி அன்று அரசு சார்பில் பல்வேறு நலத்திட்டங்கள் வழங்கும் விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்றிருந்தார்.

சிவபிரகாசம்

நிகழ்ச்சியில் தேசிய கீதம் இசைக்கப்பட்டது. அப்போது, விழாவில் இருந்த அனைவரும் தேசிய கீதத்திற்கு எழுந்து நின்றனர். ஆனால் பாதுகாப்பு பணியில் இருந்த நாமக்கல்லை சேர்ந்த சப்-இன்ஸ்பெக்டர் சிவபிரகாசம் தேசிய கீதத்தை மதிக்காமல் நாற்காலியில் அமர்ந்தவாறு செல்போனில் பேசியபடி இருந்தார். போனில் பேசி முடித்து விட்டு சாவகாசமாக எழுந்து நின்றார்.

சிவபிரகாசம்

இதனை அங்கிருந்த ஒருவர் செல்போனில் வீடியோ பதிவு செய்து சமூக வலைத்தளத்தில் பதிவிட்டார். இந்த வீடியோ வைரலாகி சர்ச்சையை ஏற்படுத்தியது. அமைச்சர் உதயநிதி நிகழ்ச்சியிலேயே இப்படி நடந்துள்ளது என எதிர்க்கட்சியினர் விமர்சித்தனர். சப்-இன்ஸ்பெக்டர் தேசிய கீதத்தை மதிக்கவில்லை என்று புகார் எழுந்தது. இதைஅடுத்து, சப்-இன்ஸ்பெக்டர் சிவபிரகாசத்தை பணி இடைநீக்கம் செய்து மாவட்ட எஸ்.பி அதிரடியாக உத்தரவிட்டார்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

2023 இந்த 6 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்! பயன்படுத்திக்கோங்க

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்!


 

From around the web