தவளை, யானை, மிக்கி மவுஸ் பலூன்களுடன் சர்வதேச பலூன் திருவிழா கோலாகலத் தொடக்கம்.. .. சிறுவர்கள் உற்சாகம்.. ..!

 
வெப்பக்   காற்று  பலூன்  திருவிழா

தமிழகத்தில் சுற்றுலாத் துறையை மேம்படுத்தும் வகையில் தமிழக அரசு பல்வேறு செயல்பாடுகளை முன்னெடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் சர்வதேச பலூன் திருவிழாவை ஒவ்வொரு ஆண்டும் நடத்தி வருகிறது.  ஜனவரி 13  சனிக்கிழமை இன்று முதல் இந்த திருவிழா தொடர்ந்து 3 நாட்கள் நடைபெற உள்ளது.  ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதத்தில்  சுற்றுலாத்துறை மேம்படுத்தும் விதமாக இந்த சர்வதேச பலூன் திருவிழா கொண்டாடப்பட்டு வருகிறது.

பலூன்


குறிப்பாக இந்த ஆண்டு சுற்றுலாத்துறை சார்பில் நடத்தப்படும் பலூன் திருவிழாவில்  பிரான்ஸ், ஜெர்மன், நெதர்லேண்ட் உட்பட  8 நாடுகளில் இருந்து, 11 வகையான பலூன்கள் பறக்க விடப்பட்டுள்ளன.   அந்த வகையில் தமிழ்நாடு சுற்றுலாத் துறை சார்பிலும் ஒரு பலூன் பறக்க விடப்பட்டு இருப்பது  குறிப்பிடத்தக்கது. இந்த பலூன்களில்  சின்னஞ்சிறுமியர், சிறுவர்களை உற்சாகப்படுத்தும் வகையில், தவளை, யானை, மிக்கி மவுஸ் உருவம் கொண்ட பலூன்கள் இடம் பெற்று இருந்தன.

பலூன் திருவிழா
 இதனை நேரில் கண்டுகளித்து உற்சாகம் அடைய  பல்வேறு மாநிலங்களில் இருந்து ஏராளமான பொதுமக்கள் வந்திருந்தனர். தொடர்ந்து 3 நாட்களிலும் இங்கு  காலை மாலை என இரு வேளைகளிலும் பலூன்கள் வானில் பறக்க விடப்படுகிறது.சில பலூன்கள் நிலைநிறுத்தப்பட்டுள்ளன. இந்த வகையான பலூன்களில் ஏற ஒருவருக்கு ரூ1500  கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. பலூன்களில் இருக்கும் இடத்திலிருந்து வானில் உயரமாக பலூன்கள் பறக்க விடப்படுகிறது. இந்த பலூன் திருவிழாவை முன்னிட்டு உணவுத் திருவிழா மற்றும் இரவு நேரங்களில் கலை நிகழ்ச்சி என பல்வேறு கலை நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது  என நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.

மார்கழிக் கோலத்தில் மட்டும் பூசணிப்பூ வைப்பது ஏன்?!

மார்கழி மாதத்தில் இந்த தவற மட்டும் செய்யாதீங்க!

மார்கழி மாதத்துக்கு இத்தனை சிறப்புகளா? விரதமுறை, பலன்கள்!!

மார்கழி மாதம் ஏன் திருமணம் செய்யக்கூடாது... பிரமிக்க வைக்கும் விஞ்ஞான உண்மைகள்!

From around the web