உல்லாசத்துக்கு இடையூறு... குழந்தையைக் கொடூரமாக கொன்ற தாய் உட்பட 3 வாலிபர்கள்!

உல்லாசத்துக்கு இடையூறாக இருந்ததால், தனது மகள் என்றும் பாராமல் குழந்தையைக் கொடூரமாகக் கொலைச் செய்த தாய் உட்பட 3 பேரைப் போலீசார் கைது செய்து மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளை அருகே, பெண் குழந்தை ஒன்று மர்மமான முறையில் இறந்த வழக்கில் துப்பு துலங்கியது. உல்லாசத்துக்கு இடையூறாக இருந்ததால் குழந்தையை கொடூரமாக கொன்றதாக குழந்தையின் தாய் மற்றும் 3 வாலிபர்களைப் போலீசார் கைது செய்தனர்.
நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே உள்ள மகாதேவன்குளத்தைச் சேர்ந்தவர் சரத். இவரது சொந்த ஊர் இட்டமொழி அருகே உள்ள அழகப்பபுரம். இவர் கோவையில் ஒரு கடையில் வேலை செய்து வருகிறார்.
இவருடைய மனைவி பிருந்தா (24). வெவ்வேறு சமுதாயத்தைச் சேர்ந்த இவர்கள் இருவரும் காதலித்து கலப்பு திருமணம் செய்துக் கொண்டனர். இவர்களுக்கு தர்ஷினி என்ற 2½ வயது பெண் குழந்தை உண்டு.
இந்நிலையில், கடந்த 23ம் தேதி இரவு பிருந்தா தனது குழந்தையை தூக்கிக்கொண்டு பக்கத்து ஊரான தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் தாலுகா நடுவக்குறிச்சியில் உள்ள தனது தாய் வீட்டிற்கு சென்றுள்ளார். அங்கு குழந்தை கட்டிலில் இருந்து கீழே விழுந்து விட்டதாக கூறி தூங்க வைத்துள்ளார்.
இந்நிலையில், அடுத்த நாள் காலையில், வெகுநேரம் ஆகியும் குழந்தை கண் விழிக்கவில்லை. இதனால் குழந்தையை பிருந்தாவும், அவரது தாயாரும் சிகிச்சைக்காக திசையன்விளை அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு குழந்தையைப் பரிசோதனை செய்த டாக்டர், குழந்தை தர்ஷினி ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தார்.
குழந்தையின் உதட்டில் ரத்தக்காயம் இருந்ததால், சந்தேகமடைந்த உறவினர்கள் இது குறித்து திசையன்விளை காவல் நிலையத்திற்குத் தகவல் அளித்தனர். இது குறித்து தகவலறிந்து போலீசார் விரைந்து சென்று குழந்தையின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த மர்ம மரணம் குறித்து தாய் பிருந்தாவிடம் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
இந்த விசாரணையில், தாயின் உல்லாசத்துக்கு இடையூறாக இருந்ததால் குழந்தை தர்ஷினி கொடூரமாக கொலை செய்யப்பட்ட அதிர்ச்சி தகவல் வெளியானது.
பிருந்தாவிடம் நடத்திய விசாரணையில், “பிருந்தாவுக்கும், இட்டமொழி அருகே உள்ள துவரம்பாடு ஊரைச் சேர்ந்த சுயம்புத்துரை மகன் லிங்கசெல்வனுக்கும் (29) பழக்கம் இருந்து வந்துள்ளது. இது நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. திருமணமான லிங்கசெல்வன், மன்னார்புரத்தில் இருந்து திசையன்விளை செல்லும் சாலையில் உள்ள வாழைத்தோட்டம் மெயின் ரோட்டில் ஐஸ்கிரீம் கடை வைத்து நடத்தி வந்துள்ளார்.
இந்நிலையில் கடந்த 23ம் தேதி இரவு லிங்கசெல்வன் மற்றும் அவருடைய நண்பர்களான துவரம்பாட்டைச் சேர்ந்த சுடலை மகன் முத்துச்சுடர் (28), லிங்கம் மகன் பெஞ்சமின் (25) ஆகியோர் மோட்டார் சைக்கிள்களில் பிருந்தாவின் வீட்டிற்கு சென்றனர். அங்கிருந்த பிருந்தாவையும், குழந்தை தர்ஷினியையும் மோட்டார் சைக்கிளில் அழைத்துக் கொண்டு வாழைத்தோட்டம் பகுதியில் உள்ள குளம் பகுதிக்கு சென்றனர். அங்கு மது அருந்தி விட்டு பிருந்தாவுடன் 3 பேரும் உல்லாசமாக இருந்தனர்.
-அப்போது குழந்தை தண்ணீர் வேண்டும் என்று கேட்டுள்ளது. போதையில் இருந்த வாலிபர்கள், குழந்தை என்றும் பாராமல் குளிர்பானத்தில் கலக்கப்பட்ட மதுவை குழந்தைக்குக் கொடுத்துள்ளனர். அதைக் குடித்த குழந்தை அழுதுள்ளது.
எனவே, தங்கள் உல்லாசத்துக்கு இடையூறாக இருக்குமோ என்ற ஆத்திரத்தில் குழந்தையின் வாயை பொத்தி அவர்கள் தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் மயக்கமடைந்த குழந்தையை 2 வாலிபர்கள் தூக்கிக் கொண்டு, ஐஸ்கிரீம் கடையில் குழந்தையைப் படுக்க வைத்து விட்டு மீண்டும் பிருந்தாவுடன் உல்லாசமாக இருந்துள்ளனர்.
பின்னர் நள்ளிரவில் ஐஸ்கிரீம் கடைக்கு வந்து மூச்சுப்பேச்சு இல்லாமல் கிடந்த குழந்தையை தூக்கி பிருந்தாவிடம் கொடுத்து விட்டு அவர்கள் 3 பேரும் அங்கிருந்து சென்று விட்டனர். என்ன செய்வதென்று தெரியாமல் தாய் வீட்டிற்கு சென்ற பிருந்தா, தனது குழந்தை கட்டிலில் இருந்து கீழே விழுந்து மயங்கி விட்டதாக கூறி நாடகமாடியது விசாரணையில் தெரிய வந்ததாக போலீசார் தெரிவித்தனர்.
இந்த கொடூரக்கொலை குறித்து வழக்குப்பதிவு செய்து பிருந்தா, லிங்கசெல்வன், முத்துச்சுடர், பெஞ்சமின் ஆகிய 4 பேரையும் போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!