சென்னை ரசிகர்களுக்கு 'மெகா' ஜாக்பாட்... ஐபிஎல் டிக்கெட் இருந்தால் இனி மெட்ரோ மற்றும் பஸ்களில் இலவச பயணம்!
சென்னையில் ஐபிஎல் திருவிழா களைகட்டத் தொடங்கிவிட்ட நிலையில், சேப்பாக்கம் மைதானத்திற்குப் போட்டிகளைக் காணச் செல்லும் ரசிகர்களுக்கு சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் மற்றும் மாநகரப் போக்குவரத்துக் கழகம் (MTC) இணைந்து ஒரு சூப்பரான இன்ப அதிர்ச்சியை அளித்துள்ளன. கூட்ட நெரிசலைக் குறைக்கவும், ரசிகர்களின் பயணத்தை எளிதாக்கவும், ஐபிஎல் போட்டி நடைபெறும் நாட்களில் செல்லுபடியாகும் மேட்ச் டிக்கெட் வைத்திருப்பவர்கள் மெட்ரோ ரயில் மற்றும் மாநகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் என அதிரடியாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அசத்தலான திட்டத்தின்படி, ரசிகர்கள் தங்களது டிஜிட்டல் அல்லது பிசிக்கல் மேட்ச் டிக்கெட்டை மெட்ரோ ரயில் நிலையங்களில் உள்ள ஸ்கேனர்களில் ஸ்கேன் செய்து, எந்தக் கட்டணமும் இன்றி பயணம் செய்யலாம். ஒரு மேட்ச் டிக்கெட்டைப் பயன்படுத்தி ஒருமுறை வந்து செல்ல (Round Trip) அனுமதி வழங்கப்பட்டுள்ளது. குறிப்பாக, சேப்பாக்கம் மைதானத்திற்கு அருகில் உள்ள 'அரசினர் தோட்டம்' (Government Estate) மெட்ரோ ரயில் நிலையத்திற்குச் செல்லவும், அங்கிருந்து வீடு திரும்பவும் இந்தச் சலுகை பொருந்தும். மேலும், நள்ளிரவு 1 மணி வரை சிறப்பு மெட்ரோ ரயில்களும் இயக்கப்பட உள்ளன.

மெட்ரோ ரயில் மட்டுமன்றி, மாநகரப் பேருந்துகளிலும் (குளிர்சாதனப் பேருந்துகள் தவிர்த்து) மேட்ச் டிக்கெட்டை நடத்துனரிடம் காண்பித்து ரசிகர்கள் இலவசமாகப் பயணிக்கலாம். போட்டி தொடங்குவதற்கு 3 மணி நேரத்திற்கு முன்பிருந்தும், போட்டி முடிந்த பிறகு 3 மணி நேரம் வரையிலும் இந்த இலவசப் பேருந்து வசதி அமலில் இருக்கும். சென்னை சூப்பர் கிங்ஸ் நிர்வாகம் இதற்கான பயணக் கட்டணத்தை ஏற்றுக்கொண்டதால், ரசிகர்கள் எவ்விதக் கட்டணமும் இன்றி ஜாலியாக மைதானத்திற்குச் சென்று வரலாம். இந்த அதிரடி அறிவிப்பால் சென்னை கிரிக்கெட் ரசிகர்கள் பெரும் உற்சாகத்தில் ஆழ்ந்துள்ளனர்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
