பரபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சி.. பணப்பெட்டியுடன் கிளம்பிய விசித்ரா..!!

 
பிக்பாஸ்

பிக்பாஸில் வைக்கப்பட்டுள்ள பணத்தை போட்டியாளர் விசித்ரா எடுத்து சென்றதாக தகவல் வெளியாகியுள்ளது...

பிக்பாஸ் 7வது சீசன் கடந்த அக்டோபர் மாதம் தொடங்கியது. வழக்கமாக ஒரு வீட்டில் நடக்கும் இந்த நிகழ்ச்சி இம்முறை பிக்பாஸ், சுமால் பாஸ் என இரண்டு வீடுகளில் நடைபெறுகிறது. அதுமட்டுமின்றி இந்த சீசனில் ஐந்து வைல்ட் கார்டு போட்டியாளர்கள் ஒரே நாளில் பிக் பாஸ் வீட்டிற்குள் அனுப்பப்பட்டனர், இது ஒரு புதிய முயற்சி. பல்வேறு திருப்பங்களுக்கு மத்தியில் இந்த சீசன் இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது.

article_image2

பிக்பாஸ் சீசன் 7 முடிய இன்னும் 10 நாட்களே உள்ள நிலையில், இறுதிப்போட்டியில் யார் வென்று டைட்டிலை வெல்வார்கள் என ரசிகர்கள் எதிர்பார்த்து வருகின்றனர். தற்போது பிக்பாஸ் வீட்டில் அர்ச்சனா, விசித்ரா, மாயா, பூர்ணிமா ஆகிய 4 பெண் போட்டியாளர்களும், விஷ்ணு விஜய், விஜய் வர்மா, தினேஷ், மணி என நான்கு ஆண் போட்டியாளர்களும் மட்டுமே 8 பேர் விளையாடி வருகின்றனர்.

இதில் விஷ்ணு  இறுதிப் போட்டிக்கான டிக்கெட்டில் வெற்றி பெற்று முதல் ஆளாக இறுதிப்போட்டிக்குள் நுழைந்ததால் நேரடியாக இறுதிப்போட்டிக்குள் நுழைந்தார். அவரைத் தவிர மீதமுள்ள 7 போட்டியாளர்கள் இந்த வார எவிக்ஷனுக்கு நாமினேட் செய்யப்பட்டுள்ளனர். இதற்கிடையில், இந்த வாரம், பிக் பாஸ் வீட்டிற்குள் ஒரு பணப்பெட்டியை அனுப்பினார். இந்த நேர்காணலில் பணத்தின் மதிப்பு முதல் நாளே ரூ.5 லட்சமாக உயர்ந்தது. இந்நிலையில் இன்று காலை பிக் பாஸ் இந்த பணத்தின் மதிப்பு ஏறி இறங்கும் என ட்விஸ்ட் கொடுத்தார். இதனால் பணத்தின் மதிப்பு எப்போது உயரும் என போட்டியாளர்களும் ஆவலுடன் காத்திருந்தனர். இதற்கிடையில், தற்போதைய தகவலின்படி, இந்த பணப்பெட்டியுடன் பிக்பாஸ் வீட்டை விட்டு விசித்ரா வெளியேறியதாக கூறப்படுகிறது.

article_image3

நேற்றைய எபிசோடில், பணப்பெட்டியை எடுக்கும் எண்ணம் இல்லை என்றும், கடன் உள்ளவர்கள் பணத்தை எடுத்துக்கொண்டு ஓடிவிடுங்கள் என்றும் கூறியுள்ளார். கடைசியில் அவரே பணப்பெட்டியுடன் வெளியேறியதால் தகவல் அறிந்த நெட்டிசன்கள் கிண்டல் செய்து வருகின்றனர். விசித்ரா 13 லட்சத்துடன் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறியதாக கூறப்படுகிறது. இந்த தொகை ரூ.15 லட்சமாக உயரும் என மற்ற போட்டியாளர்கள் ஆவலுடன் காத்திருந்த நிலையில், விசித்ரா அலேக்கான பெட்டியை ஏந்தி சென்றதாக கூறப்படுகிறது.

மார்கழிக் கோலத்தில் மட்டும் பூசணிப்பூ வைப்பது ஏன்?!

மார்கழி மாதத்தில் இந்த தவற மட்டும் செய்யாதீங்க!

மார்கழி மாதத்துக்கு இத்தனை சிறப்புகளா? விரதமுறை, பலன்கள்!!

மார்கழி மாதம் ஏன் திருமணம் செய்யக்கூடாது... பிரமிக்க வைக்கும் விஞ்ஞான உண்மைகள்!

From around the web