எனக்கு இது ஃபேர்வெல்!! தோனி உருக்கம்!! ரசிகர்கள் அதிர்ச்சி!!

 
தோனி

16வது ஐபிஎல் போட்டிகள் இந்தியாவின் முக்கிய நகரங்களில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. கோப்பையை கைப்பற்றப்போவது யார்? என்ற ஆர்வத்துடன் ரசிகர்கள் போட்டிகளை கண்டு களித்து வருகின்றனர். கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதிக்கொண்ட போட்டியில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 49 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் 5 வெற்றிகளுடன்  முதலிடத்தை பிடித்துள்ளது.

தோனி

தொடர் வெற்றிக்கு பின்  கேப்டன் மகேந்திர சிங் தோனி  ரசிகர்களிடையே உரையாற்றினார். அந்த உரையில்  ”இவ்வளவு எண்ணிக்கையில் திரண்டு வந்த ரசிகர்களுக்கு நான் நன்றி சொல்லிக் கொள்கிறேன். இவர்களில் பெரும்பாலானவர்கள் அடுத்த முறை கேகேஆர் ஜெர்சியை அணிந்து வருவார்கள். இவர்கள் எனக்கு பிரிவு உபச்சாரம் செய்து கொண்டிருக்கிறார்கள். எனவே இந்த கூட்டத்திற்கு மிக்க நன்றி!” என பேசியுள்ளார். ” வேகப்பந்து வீச்சாளர்களும்,  சுழற் பந்துவீச்சாளர்களும் பந்து வீச்சில் சிறப்பாக செயல்படுகிறார்கள். மைதானத்தின் ஒரு பக்கம் பவுண்டரி நீளம் குறைவானது.  

சென்னை தோனி கிரிக்கெட்

கொல்கத்தா அணியில் நல்ல பவர் ஹிட்டர்கள் இருப்பதற்கு  மரியாதை கொடுக்க வேண்டும்!”  அதே நேரத்தில் அணியில் யாராவது காயம் அடைந்தால் எதுவுமே செய்ய முடியாது. இளைஞர்களை உற்சாகப்படுத்தி நம்பிக்கை ஊட்டி செயல்பட வைக்க வேண்டியதுதான். எங்களுடைய  எல்லா வீரர்களும் சிறப்பாக செயல்படுவது அதிர்ஷ்டம் தான். ரகானேவின் திறமையைப் பற்றி கூறினால்  அவரை அவர் பேட் செய்யும் விதத்தில் விட்டு விட வேண்டும். சுதந்திரம் கொடுக்கப்பட வேண்டும். அவர் விளையாடுவதற்கான சரியான இடத்தை கொடுக்க வேண்டும். அணியின் முன்னேற்றத்திற்காக யாராவது ஒருவர் தன்னுடைய இடத்தையும் தியாகம் செய்ய வேண்டியது அவசியமே ” என பேசியுள்ளார். 

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web