கொட்டப்போகுது மழை... சென்னை உட்பட 13 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட்!

தமிழகத்தில் அடுத்த 2 மணி நேரத்தில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட 13 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இன்று காலை முதலே டெல்டா மாவட்டங்களில் ஒருசில இடங்களில் லேசான மழை பெய்து வரும் நிலையில் தற்போது சென்னை உள்ளிட்ட மாவட்டங்களிலும் மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக வானிலை மையம் கூறியுள்ளது.
இன்று காலையில் சென்னை உட்பட தமிழகத்தின் பல மாவட்டங்களில் வெயில் வாட்டி வதைத்த நிலையில் அடுத்த 2 மணி நேரத்தில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்பட தமிழகத்தின் 13 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை மையம் கூறியுள்ளது.
இது தொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், கள்ளக்குறிச்சி, சேலம், திருவண்ணாமலை, திருவாரூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், சிவகங்கை, புதுக்கோட்டை, ராமநாதபுரம் ஆகிய 13 மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் லேசான இடி மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது" என்று தெரிவித்துள்ளது.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!