அட கொடுமையே... மனைவியின் கைகளைக் கட்டி தெருவில் இழுத்துச் சென்ற காவலர்!

 
கள்ளக்காதல் ராஜூ

மனைவியின் கள்ளக்காதலைக் கண்டித்து வந்த கணவர், அப்படியும் சொல்பேச்சைக் கேட்காமல் மனைவி கள்ளக்காதலனுடன் நெருக்கமாக இருந்த நிலையில், கையும், களவுமாக பிடித்த கணவன், மனைவியின் கைகளைக் கட்டி தெருவில் இழுத்து சென்றுள்ளார். தெலங்கானா மாநிலம் முலுகு மாவட்டம் மங்காப்பேட்டை அரசுப் பள்ளியில் திருமணமான பெண் ஒருவர் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். இவரது கணவர் ராஜூ ஆயுதப்படை பிரிவில் காவலராக உள்ளார். இந்த ஆசிரியைக்கும் அதே பள்ளியில் பணிபுரியும் சக ஆசிரியரான நாகேந்திரபாபுவுக்கும் கள்ளக்காதல் இருந்து வந்துள்ளது. 

ஆசிரியை

இவர்கள் பள்ளியில் சந்திப்பது போக வெளியிடங்களுக்கும் சென்று சுற்றியதாகவும், தனிமையில் உல்லாசமாகவும் இருந்ததாக கூறப்படுகிறது. ஆசிரியையின் கள்ளக் காதல் விவகாரம் ஆயுதப்படையில் காவலராக பணிபுரியும் அவரது கணவரான ராஜுவுக்கு தெரிய வந்தது. இதனால், தனது மனைவியின் தகாத உறவை கண்டித்து, கள்ளக் காதலை கைவிடும் படி எச்சரித்துள்ளார். ஆனால், அதையும் மீறி நாகேந்திரபாபுவுடன் ஆசிரியை பழகி வந்துள்ளார்.

ஆசிரியை

இந்நிலையில், தனது மனைவி கள்ளக் காதலனுடன் உல்லாசமாக இருப்பதை கண்ட ராஜூ, இருவரையும் கையும் களவுமாக பிடித்துள்ளார்.  பின்னர் ஆசிரியர் நாகேந்திரபாபு கைகளை கயிற்றால் கட்டி, கிராமத்தை சுற்றி காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றார். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

2023 இந்த 6 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்! பயன்படுத்திக்கோங்க

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

From around the web