ஜனநாயகன் படத்திற்கு தணிக்கை சான்றிதழ் தாமதம்… கே.எஸ் அழகிரி எச்சரிக்கை!
‘
நடிகர் விஜய்யின் கடைசி படம் ‘ஜனநாயகன்’ ஜனவரி 9-ம் தேதி பொங்கல் ஸ்பெஷலாக வெளியாகும் நிலையில், படத்துக்கு சான்றிதழ் வழங்க கோரி படத் தயாரிப்பு நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தில் அவசர வழக்கு தாக்கல் செய்துள்ளது. வெளியீட்டுக்கு মাত্র 3 நாட்கள் உள்ள நிலையில் இன்று மதியம் விசாரணைக்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

ட்ரெய்லர் வெளியான 24 மணி நேரத்திற்குள் 4 கோடி பார்வைகளை கடந்து சாதனை படைத்த ‘ஜனநாயகன்’ படத்துக்கு இதுவரை சான்றிதழ் வழங்கப்படாததால் படக்குழுவுக்கு பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. சென்னையில் முதல்நாள் காட்சி முன்பதிவு தொடங்காததும் ரசிகர்களில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. அவசர மனுவில் பட வெளியீடு தாமதமாகும் அபாயம் உள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது.

இந்த சூழலில், தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் KS அழகிரி, “சென்சார் மட்டும் தரலேன்னா… ஜனநாயகன் படத்திற்கு சான்றிதழ் வழங்க தாமதித்தால், அது பின்விளைவுகளை ஏற்படுத்தும்” என கருத்து தெரிவித்துள்ளார். அரசியல் கருத்துகள் அதிகம் இடம்பெற்றுள்ளதால், தாமதம் தவெக தரப்பின் குற்றச்சாட்டையும் எழுப்பியுள்ளது. சான்றிதழ் பிரச்னை தீர்ந்தால், ஜனவரி 9-ம் தேதி படம் வெளியீடு உறுதி என படக்குழு தெரிவித்துள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
