ஜெபி. நட்டா குடும்பத்துடன் திரிவேணி சங்கமத்தில் புனித நீராடல்!

உத்திரப்பிரதேச மாநிலத்தில் பிரக்யாஜில் ஜனவரி 13 முதல் மகா கும்பமேளா தொடங்கி நடைபெற்று வருகிறது. அரசியல் தலைவர்கள் பிரபலங்கள், பொதுமக்கள் என இதுவரை 60 கோடிக்கும் மேற்பட்டோர் புனித நீராடியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அந்த வகையில் நட்டாவுடன் உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், துணை முதல்வர் பிரிஜேஷ் பதக், அமைச்சர்கள் சுவதந்திர தேவ் சிங் மற்றும் நந்த் கோபால் குப்தா ஆகியோரும் திரிவேணி சங்கமத்தில் நீராடினார்கள்.
நட்டாவும் அவரது குடும்பத்தினரும் சூரியக் கடவுளை வழிபட்டதோடு, கங்கை நதிக்கு புடவை, தேங்காய், பூக்கள் மற்றும் பிற காணிக்கைகளை வழங்கினர் . இன்று பிற்பகலில் பாஜக தலைவர் ஜெபி.நட்டா பிரயாக்ராஜ் விமான நிலையம் வந்தடைந்தார்.
அங்கு அவரை துணை முதல்வர் பிரிஜேஷ் பதக், பாஜக மாநிலத் தலைவர் பூபேந்திர சிங் சௌத்ரி, அமைச்சர் நந்த் கோபால் குப்தா மற்றும் பிரவீன் படேல் எம்பி ஆகியோர் வரவேற்றனர். உலக அளவில் மிகப் பெரிய ஆன்மிக-கலாசார நிகழ்வாக கருதப்படும் மகா கும்பமேளாவில் கங்கை, யமுனை, சரஸ்வதி ஆகிய நதிகள் கூடும் திரிவேணி சங்கமத்தில் இந்த புனித நீராடல் நிகழ்ந்தது.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!