நகைப் பிரியர்கள் அதிர்ச்சி... 3 மணி நேரத்தில் தங்கம் விலை மேலும் உயர்வு!

தமிழகத்தில் ஆபரணத் தங்கத்தின் விலை சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை நிலவரத்தின் அடிப்படையில் நிர்ணயிக்கப்பட்டு வருகிறது. சர்வதேச பொருளாதார நிலை மற்றும் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உள்ளிட்ட காரணங்களால் தினமும் தங்கம் விலையில் மாற்றம் ஏற்படுகிறது. புத்தாண்டு தொடக்கம் முதலே தங்கத்தின் விலை உச்சம் தொட்டு வருகிறது. ஒருநாளில் குறையும் தங்கம் அதே வேகத்தில் 2 மடங்காக அடுத்த நாளே உயர்ந்து நிற்கிறது.
அந்த வகையில் செவ்வாய் கிழமை சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.560 உயர்ந்து ஒரு சவரன் தங்கம் ரூ.64,080 க்கு விற்பனை செய்யப்பட்டது. நேற்று ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.440 உயர்ந்து ஒரு சவரன் தங்கம் ரூ.64,520 க்கு விற்பனையானது.இன்று காலை தங்கத்தின் விலை குறைந்து சென்னையில் இன்று கிராமுக்கு ரூ45 குறைந்து ஒரு கிராம் ரூ8020க்கும், சவரனுக்கு ரூ360 குறைந்து ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.64160க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
இந்நிலையில், ஒரே நாளில் 2வது முறையாக ஆபரணத் தங்கம் விலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. காலை சவரனுக்கு ரூ 360 குறைந்த நிலையில், தற்போது ரூ320 அதிகரித்து இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இதனால் நகைப்பிரியர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். சென்னையில் ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ரூ.8,060-க்கும், ஒரு சவரன் ரூ.64,480க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!