நாளை சென்னை வருகிறார் ஜே.பி.நட்டா... மாநில நிர்வாகிகளுடன் ஆலோசனை!
May 2, 2025, 07:39 IST

நாளை மே 3ம் தேதி பாஜக தேசிய தலைவர் ஜே .பி. நட்டா சென்னைக்கு வருகை தர இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னைக்கு வரும் ஜே.பி. நட்டா, சென்னையில், மாநில நிா்வாகிகளுடன் ஆலோசனை நடத்தவுள்ளாா்.
2026ல் சட்டமன்ற தேர்தல் தமிழகத்தில் நடைபெற உள்ள நிலையில் தமிழக அரசியல் நிலவரம், கூட்டணி வியூகம் குறித்து ஆலோசனை நடத்த இருப்பதாக அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. சென்னை தாம்பரத்தில் உள்ள ஒரு தனியாா் பல்கலைக்கழக நிறுவனத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்கிறார்.
அதே நேரத்தில் கட்சிப் பணிகள் குறித்தும் ஆலோசனை நடத்த முடிவு செய்துள்ளார். ஜே .பி நட்டாவின் வருகையை முன்னிட்டு பாஜகவின் முக்கிய நிா்வாகிகள் சென்னையில் தங்கி இருக்க வேண்டும் என தமிழக பாஜக தலைமை அறிவுறுத்தி உள்ளது.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
From
around the
web