உஷார்!! ஜூலை 2ம் தேதி 6 மாவட்டங்களுக்கு கனமழை அலர்ட்!!

 
rain


தென்மேற்கு வங்ககடல் பகுதிகளில் நிலவி வரும் மேற்கு திசை காற்றின்  வேகமாறுபாடு காரணமாக தமிழகம், புதுச்சேரி , காரைக்கால் பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்த மழை மேலும் 4 நாட்களுக்கு  நீடிக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில்  இன்று தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். இதேபோல் நாளை ஜூலை 1ம் தேதி தமிழகம்,  புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும்.

school rain

நாளை மறுதினம் ஜூலை 2 ம் தேதி ஞாயிற்றுக்கிழமை   நீலகிரி, கோவை,  கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில்  ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.   ஜூலை 3ம் தேதி தமிழகம், புதுச்சேரி   மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னனுடன் கூடிய லேசானது மதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

School Student in Rain

திருவள்ளூர், காஞ்சிபுரம், நீலகிரி மற்றும் கோவை மாவட்டங்களில்  மிக கனமழையும், திருப்பூர், திண்டுக்கல், தேனி, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு மற்றும் சென்னையில் கனமழையும் பெய்யக்கூடும்.  ஜூலை 4ம் தேதி தமிழகம்,   புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும். நீலகிரி மற்றும் கோவை மாவட்டங்களில் ஓரிரு  இடங்களில் கன முதல் மிக கனமழையும்  திருப்பூர், திண்டுக்கல், தேனி, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

பொலிவான பிரகாசிக்கும் சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

From around the web