இன்று முதல் கலைஞர் நூற்றாண்டு பூங்கா மீண்டும் திறப்பு... நுழைவுச்சீட்டு வழங்கும் நேரத்தில் மாற்றம்!
கனமழை காரணமாக கடந்த சில நாட்களாக மூடப்பட்டிருந்த கலைஞர் நூற்றாண்டு பூங்கா, இன்று முதல் மீண்டும் திறக்கப்படுவதாக அறிவிக்கப்பட்ட நிலையில், பொதுமக்கள் அனுமதிக்கப்படுகிறார்கள்.
அதே சமயம் பூங்காவிற்கு பொதுமக்கள் அதிகளவில் வரும் நிலையில், கூட்ட நெரிசலைத் தவிர்க்க, பறவையகம், ஜிப்லைன் மற்றும் இசை நீரூற்று ஆகியவற்றுக்கு நுழைவுச்சீட்டு வழங்கும் நேரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து தோட்டக்கலைத் துறை இயக்குநர் வெளியிட்ட செய்திக்குறிப்பில், “சென்னை கதீட்ரல் சாலையில் அமைக்கப்பட்டுள்ள கலைஞர் நூற்றாண்டு பூங்காவுக்கு, கனமழை எச்சரிக்கையின் காரணமாக கடந்த அக்டோபர் 15ம் தேதி முதல் அக்டோபர் 18ம் தேதி வரை விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது. இன்று அக்டோபர் 19ம் தேதி முதல் வழக்கம் போல் பூங்கா செயல்படும்.

கூட்ட நெரிசலைத்தவிர்க்க கலைஞர் நூற்றாண்டு பூங்காவுக்கான நுழைவுச்சீட்டு https://tnhorticulture.in/kcpetickets என்றஇணையதளம் வாயிலாக பெற வழிவகை செய்யப்பட்டுள்ளது. இதில் குறிப்பாக பறவையகம், ஜிப்லைனுக்கு மாலை 4 மணிவரை மட்டுமே நுழைவுச்சீட்டு வழங்கப்படும்.
இசை நீரூற்றுக்கு ஒரு நாளைக்கு 320 பேருக்கு மட்டுமே நுழைவுச்சீட்டு வழங்கப்படுவதால், மாலை4 மணி முதல் இணையதளம் வாயிலாக நுழைவுச்சீட்டு பெற்றுக் கொள்ளலாம். மாலை 6 மணி வரை பொதுநுழைவுச்சீட்டு இணையதளத்தில் வழங்கப்படும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை...
ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க
இந்த 8 நட்சத்திரக்காரர்களுக்கு அதிர்ஷ்ட மழை... வாய்ப்பை பயன்படுத்திக்கோங்க!
