20000 இருக்கைகள், 50 இயக்குநர்கள், 20 நடன இயக்குநர்கள்.... பிரம்மாண்ட மேடையில் கலைஞர் நூற்றாண்டு கொண்டாட்டம் !
தமிழகத்தின் முன்னாள் முதல்வரும் , மறைந்த தி.மு.க தலைவருமான கலைஞர் கருணாநிதிக்கு நாளை நூற்றாண்டு விழா கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. அந்த வகையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கப் பொதுக்குழுக் கூட்டத்தில் ‘கலைஞர் நூற்றாண்டு விழா’ பிரம்மாண்டமாக நடத்தப்படும்’ என அறிவிக்கப்பட்டது. தமிழ் திரையுலகை தனது அட்டகாசமான வசனங்களால் சிரிக்கவும், சிந்திக்கவும் வைத்த வசனகர்த்தா கருணாநிதி நூற்றாண்டு விழாவினை தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் தலைமையில் அனைத்து திரை உலக சங்கங்களும் இணைந்து நாளை ஜனவரி 6ம் தேதி சென்னை கிண்டியில் உள்ள ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் சிறப்பாக நடத்த உள்ளது.
இந்த விழாவில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின், விளம்பரத்துறை அமைச்சர் மு.பெ. சாமிநாதன், நடிகர்கள் கமல்ஹாசன், ரஜினிகாந்த் மற்றும் தமிழ் திரை உலகின் முன்னணி நட்சத்திரங்கள், தெலுங்கு திரையுலகில் சிரஞ்சீவி,, வெங்கடேஷ், மலையாள திரையுலகில் மம்முட்டி, மோகன்லால், கன்னட பட உலகில் சிவராஜ்குமார் மற்றும் பாலிவுட்டிலும் முன்னணி நட்சத்திரங்கள் என அனைத்து மொழி நட்சத்திரங்களும் கலந்து கொள்ள உள்ளனர்.
இந்நிலையில், கலைஞர் நூற்றாண்டு விழாவிற்கான அழைப்பிதழ் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் நடிகர் சங்கம் சார்பில் பூச்சி முருகன், இயக்குநர் சங்கம் சார்பில் லிங்குசாமி, தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் சார்பில் முரளி ராமநாராயணன், தென்னிந்திய திரைப்பட தொழிலாளர் சம்மேளன தலைவர் ஆர்.கே.செல்வமணி ஒன்றிணைந்து வழங்கியுள்ளனர். நாளை கலைஞர் நூற்றாண்டு விழா 6 மணி நேரம் நடைபெறுகிறது. இந்த விழாவில் கலை நிகழ்ச்சிகள், கருணாநிதி வசனம், பாடல்கள் எழுதிய படங்களில் இருந்து பல புதுமையான காட்சி அமைப்புகள், கலைஞரை பற்றி இதுவரை வெளிவராத தகவல்கள் , ஆவண படங்கள் என பல தரப்பட்ட பொழுது போக்கு அம்சங்கள் நடைபெற உள்ளன.
இந்தவிழாவை பிரம்மாண்டப்படுத்தும் வகையில் டெல்லியில் இருந்து ட்ரோன்கள், பிரம்மாண்டமான ஷோக்கள் , 50க்கும் மேற்பட்ட முன்னனி இயக்குனர்கள், 20க்கும் மேற்பட்ட நடன மாஸ்டர்கள் ஒத்திகையில் ஈடுபட்டு வருகின்றனர். மிகப்பெரிய மேடை, 20,000 பேர் அமர்ந்து பார்க்கும் இருக்கைகள், 50க்கும் மேற்பட்ட எல்.இ.டி திரைகள் என அனைத்து ஏற்பாடுகளும் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் மேற்பார்வையில், பெப்சி பணியாளர்கள் செய்து வருவது குறிப்பிடத்தக்கது.
மார்கழிக் கோலத்தில் மட்டும் பூசணிப்பூ வைப்பது ஏன்?!
மார்கழி மாதத்தில் இந்த தவற மட்டும் செய்யாதீங்க!
மார்கழி மாதத்துக்கு இத்தனை சிறப்புகளா? விரதமுறை, பலன்கள்!!
மார்கழி மாதம் ஏன் திருமணம் செய்யக்கூடாது... பிரமிக்க வைக்கும் விஞ்ஞான உண்மைகள்!