கலாஷேத்திரா மாணவிகள் விடிய விடிய போராட்டம்.. இன்று தமிழக மகளிர் ஆணையம் விசாரணை!

 
கலாசேத்திரா மாணவி

விடிய விடிய கலாசேத்திரா மாணவிகள், தங்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்த பேராசிரியர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், உடனடியாக நடவடிக்கை எடுக்கும் வரையில் உள்ளிருப்பு போராட்டம் தொடரும் என்றும் தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு  மின்னஞ்சல் மூலமாக கடிதம் அனுப்பி விட்டு, நேற்றி இரவு முழுவதும் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில், இன்று தமிழக மகளிர் ஆணையம் விசாரணையில் ஈடுபடுகிறது. 

கலாசேத்திராவில் படிக்கும் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்து வரும் பேராசிரியர் உட்பட நான்கு பேர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முதல்வருக்கு எழுதியிருக்கும் கடிதத்தில் மாணவர்களை வலியுறுத்தி இருக்கிறார்கள். இதே புகாரை மத்திய கலாச்சார அமைச்சகத்திற்கும் மின்னஞ்சல் மூலம் அனுப்பியிருப்பதாக தெரிகிறது. 

k

கலாஷேத்திரா மாணவிகளிடம் நேற்று தொடர்ந்து மூன்று மணி நேரம் தேசிய மகளிர் ஆணையம் விசாரணை நடத்திய நிலையில், இன்று தமிழக மகளிர் ஆணையம் விசாரணை நடத்துகிறது. 

புகழ் பெற்ற அடையாறு கலாஷேத்ராவில், பேராசிரியர் ஒருவர் தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில், அடையாறு அனைத்து மகளிர் போலீசார் இது தொடர்பாக விசாரணை நடத்தி வந்தனர்.  

கலாஷேத்திரா

இந்நிலையில் கலாசேத்ராவில் நேற்று மாலை 3 மணி நேரம் தேசிய மகளிர் ஆணையத் தலைவர் ரேகா சர்மா ரகசிய விசாரணை நடத்திச் சென்றிருக்கிறார். இது கலாசேத்திராவில் பரபரப்பு ஏற்படுத்தி இருக்கிறது. பாதிக்கப்பட்ட மாணவியை மட்டும் தனியாக வைத்து விசாரிக்காமல் மாணவ ,மாணவிகள் அனைவரையும் ஒன்றாக அமர வைத்து விசாரித்ததாக குற்றம் எழுந்திருக்கிறது.  

இந்நிலையில், குற்றச்சாட்டுக்குள்ளான பேராசிரியர் மீது இதுவரையில் நடவடிக்கை எடுக்காததை கண்டித்து கல்லூரி வளாகத்தில் மாணவிகள் இரவு  முழுவதும் விடிய விடிய உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். 

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web