விஜய், உதயநிதி, கனிமொழி பிள்ளைகள் ஏன் வெளிநாட்டில் படிக்கின்றனர்? ஹெச்.ராஜா ஷொட்டு!

 
ஹெச் ராஜா


 தமிழகத்தில் கோவை தெற்கு மாவட்ட பாஜக சார்பில்  2025 மத்திய பட்ஜெட் விளக்க பொதுக் கூட்டம் நடத்தப்பட்டது. இந்த கூட்டத்தில்  பாஜக தெற்கு மாவட்ட தலைவர்  ஆர்.சந்திரசேகர் தலைமையில் நடைபெற்ற பட்ஜெட் விளக்க பொதுக்கூட்டத்தில் பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் எச்.ராஜா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.  அவருடன்  முன்னாள் மாவட்ட தலைவர் கே.வசந்தராஜன், உட்பட பல  நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய ஹெச்.ராஜா, “பட்ஜெட்டில் வீர தமிழச்சி நிர்மலா சீதாராமன் சிக்ஸர் அடித்து உள்ளார். விவசாயிகள் மற்றும் சிறு, குறு நிறுவனங்களுக்கு அதிகம் பட்ஜெட்டில் இடம் கொடுக்கப்பட்டு உள்ளது.

இந்துக் கோவில்களை போல் மற்ற மத வழிபாடுகளும் தமிழில் நடத்தப்படுமா? ஹெச். ராஜா காட்டம்!

விவசாயிகளுக்கு ரூ3 லட்சம் கோடி  இருந்த பயிர்க்கடனை ரூ5 லட்சம் கோடி ரூபாய் வரை உயர்த்தி உள்ளது மத்திய அரசு. தமிழகத்தில் பொழுது போகவில்லை என்பதால், மொழி பிரச்சனையை முதல்வர் ஸ்டாலின் கையில் தூக்கிப் பேசிக் கொண்டு இருக்கிறார். இது போன்று பேசுவதற்கு தமிழக முதல்வருக்கு வெட்கம் இருக்காதா? ஹிந்தி உங்களுக்கு பிரச்சனையாக இருந்தால் உங்கள் சன் சைன் பள்ளியில் மாணவர்களுக்கு ஹிந்தி சொல்லித் தரக் கூடாது. முதலில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் மகேஷ் பொய்யாமொழியை வீட்டுக்கு அனுப்ப வேண்டும். 1 முதல் 8 வரையில் உள்ள மாணவர்களை மாற்றுவதற்கு முடியவில்லை எனில்  எதற்கு அமைச்சராக இருக்க வேண்டும்?  நீங்கள் நடத்தும் பள்ளியில் இந்தி இருக்கலாம், ஆனால் ஏன் அரசு பள்ளியில் இந்தி இருக்கக் கூடாது? 

ஹெச் ராஜா


ஆனைமலையாறு - நல்லாறு திட்டம் நீண்ட நாளாக கிடப்பில் உள்ளது. கேரள மாநிலம் சென்ற முதல்வர் ஏன் இதைப் பற்றி பேசவில்லை? அதே போல், கோவை வெள்ளலூர் குப்பை கிடங்கு பகுதியில் 20000 வீடுகள் உள்ளது. அந்த பகுதி மக்கள் வெளியே வர முடியாத சூழல் ஏற்பட்டு உள்ளது. அந்த குப்பை கிடங்கால், நுரையீரல் தொற்று, மார்பக புற்றுநோய் போன்ற வியாதிகளால் மக்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர். ஏப்ரல் மாதம் முதல் கோவை மாநகராட்சிக்கு இப்பகுதி மக்கள் யாரும் வரி கொடுக்க மாட்டார்கள். த.வெ.க விஜய் பிள்ளைகள் எங்கு படிக்கிறது? சமச்சீர் பள்ளியிலா? மாநகராட்சி பள்ளியில் படிக்கும் மாணவர்களை மட்டும் வேறு மொழி படிக்காதே என்கிறார்கள். இருமொழி கொள்கையை ஆதரிப்பவர்கள் நாளை காலை அவர்களது குழந்தைகளை மாநகராட்சி பள்ளியில் சேருங்கள். எந்த மாநிலத்திலும் மும்மொழி கொள்கைக்கு தடையில்லை. விஜய்  , ஸ்டாலின், கனிமொழி ஆகியவர்களின் குழந்தைகள் வெளிநாட்டில் படித்துக் கொண்டு இருக்கிறார்கள் அவர்களை, இங்கு கொண்டு வந்து மாநகராட்சி பள்ளியில் படிக்க வையுங்கள்” என ஆவேசமாக பேசியுள்ளார்.  
  

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

 உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

From around the web