அமைச்சர் பொன்முடியின் கொச்சை பேச்சுக்கள் கண்டிக்கத்தக்கது... கனிமொழி எம்.பி. கண்டனம்!

தமிழகத்தில் அமைச்சர் பொன்முடி சில நேரங்களில் சர்ச்சையான கருத்துக்களை கூறி மாட்டிக்கொள்கிறார். அதன்படி கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு மகளிர் விடியல் பயணம் குறித்து அமைச்சர் பொன்முடி, பேருந்தில் பெண்கள் ஓசியில் தானே போகிறீர்கள் என கூறியிருந்தார். தமிழகம் முழுவதும் இந்த கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
அமைச்சர் பொன்முடி அவர்களின் சமீபத்திய பேச்சு ஏற்றுக்கொள்ள முடியாதது. எந்த காரணத்திற்காகப் பேசப் பட்டிருந்தாலும் இப்படிப்பட்ட கொச்சையான பேச்சுகள் கண்டிக்கத்தக்கது.
— Kanimozhi (கனிமொழி) (@KanimozhiDMK) April 11, 2025
இந்நிலையில், தற்போது திமுக நிகழ்ச்சி ஒன்றி பேசிய பொன்முடி, வைணவம் மற்றும் சைவம் குறித்தும் விலைமாதுகள் குறித்தும் பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பொன்முடியின் இந்த கருத்துக்கு பாஜக உட்பட அரசியல் கட்சியினர் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
அமைச்சர் பொன்முடியின் பேச்சுக்கு திமுக எம்.பி கனிமொழி கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து கனிமொழி எம்பி தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் “ அமைச்சர் பொன்முடி அவர்களின் சமீபத்திய பேச்சு ஏற்றுக்கொள்ள முடியாதது. எந்த காரணத்திற்காகப் பேசப்பட்டிருந்தாலும் இப்படிப்பட்ட கொச்சையான பேச்சுகள் கண்டிக்கத்தக்கது” எனப் பதிவிட்டுள்ளார்.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!