கனிமொழி எம்.பி., தொகுதியில் சாக்கடை கலந்த குடிநீர் விநியோகம்... பொதுமக்கள் கடும் அவதி!

தூத்துக்குடி பூபாலராயர்புரம் 6வது தெரு பகுதியில் சாக்கடை கலந்த குடிநீர் விநியோகம் செய்யப்படுவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், "தூத்துக்குடி மாநகராட்சிக்கு உட்பட்ட 9வது வார்டில் பூபாலராயர்புரம் 6வது தெரு மத்தி பகுதியில் குடிநீர் விநியோக முறையில் ஏற்பட்டு வரும் குழப்பம் ஒரு புறம் இருக்கும் பட்சத்தில், குடிநீர் சப்ளையில் ஏற்பட்டுள்ள மாயாஜாலம் மக்களை அச்சுறுத்தி வருகிறது. குடி நீர் முறையில் வெளிவரும் தண்ணீர் முழுமையாக சாக்கடை நீராகவே வெளிவருகிறது.
கோடைகால தேவையில் குடி நீரின் அவசியத்தை மாநகராட்சி மறந்துவிட்டதால் இந்த அவலமும், அபாயமும் ஏற்பட்டுள்ளது. ஆகவே இந்த அவலத்தையும், அபாயத்தையும் உடணடியாக மாநகராட்சி நிர்வாகம் சரி செய்து, பொதுமக்களை சுகாதார சீர்கேட்டில் இருந்து பாதுகாத்திட வேண்டும் என்று பூபாலராயர்புரம் 6வது தெரு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!