இன்று சுமங்கலி வரம் தரும் காரடையான் நோன்பு.. தேய்பிறை அஷ்டமியில் சரடு மாற்றலாமா? முழுத் தகவல்கள்!

இன்று காரடையான் நோன்பு கடைப்பிடிக்கப்படுகிறது. தீர்க்க சுமங்கலி வரம் தருகிற.. மாங்கல்ய தோஷம் நீக்குகிற காரடையான் நோன்பு கடைப்பிடிக்கும் முறையைப் பார்க்கலாம் வாங்க. நேற்று மாலையே தேய்பிறை அஷ்டமி திதி ஆரம்பித்திருக்கிற நிலையில், சரடு மாற்றிக் கொள்ளலாமா? என்கிற சந்தேகம் பலருக்கும் இருக்கும். ஆடிப் பெருக்கு, மீனாட்சி திருக்கல்யாணம் போன்ற நாட்களில் சரடு மாற்றிக் கொள்வதைப் போலவே இன்றும் மாற்றிக் கொள்ளலாம். நல்ல நாட்களில் நாளைத் தான் பார்க்க வேண்டுமே தவிர திதியைப் பார்க்க தேவையில்லை. கணவரின் நீண்ட ஆயுள் மற்றும் ஆரோக்கியதிற்காக சுமங்கலி பெண்கள் இருக்கும் விரதமே காரடையான் நோன்பு விரதம்.மாசி மாதம் முடிந்து பங்குனி தொடங்கும் வேளையில் இந்த விரதம் மேற்கொள்ளப்பட வேண்டும். கௌரி விரதம், காமாட்சி நோன்பு எனவும் குறிப்பிடுவர். சாவித்திரி தன்னுடைய தவ வலிமையால் தன்னுடைய கணவன் சத்தியவானின் உயிரை எடுத்து சென்ற எமனுடன் போராடி மீட்டாள் என்பது புராணக் கதை.
இந்த தினத்தில் சத்தியவான் சாவித்திரி சரிதம் படிப்பவர்களுக்கு நல்ல வாழ்க்கை அமையும். கணவன் உயிரை திருப்பி கொடுத்த எமனுக்கு சாவித்திரி தன் பக்தியை நிரூபிக்க உருகாத வெண்ணெயால் செய்யப்பட்ட கார அடையை காணிக்கையாக படைத்தாள். கார் என்றால் கருமை . அடையான் என்றால் அடைந்தவன் .கருமையான இருள் சூழ்ந்த யமலோகத்தை அடையாதவன் என்பதால் காரடையான் நோன்பு என்ற பெயர் ஏற்பட்டது. கன்னிப் பெண்களுக்கு விரைவில் மாங்கல்ய பாக்கியம் பெறவும், சுமங்கலி பெண்கள் தீர்க்க சுமங்கலி வரம் பெறவும் இவ்விரதத்தை அனுஷ்டிக்க வேண்டும்.
இந்த தினத்தில் அதிகாலையில் எழுந்து மஞ்சள் மற்றும் வேப்பிலை கலந்த புனிதநீரில் நீராட வேண்டும். வாசலில் காவி பூசி கோலமிட வேண்டும். பூஜையறையிலும் கோலமிட்டு நித்திய பூஜைகளை செய்ய வேண்டும். பராசக்தியை நினைத்து இந்த நோன்பை அனுஷ்டிக்கலாம். இன்று மார்ச் 15 ம் தேதி காலை 5 மணியிலிருந்து 6 மணிக்குள் தாலி சரடை புதிதாக மாற்றிக் கொள்ளலாம்.
கணவனின் கையால் புதிய சரடை கட்டிக் கொள்ளலாம். தங்கத்தால் தாலி சரடு அணிந்திருப்பவர்களும் கணவரின் நீண்ட ஆயுளுக்காக சிறிது மஞ்சள் கயிற்றையும் கோர்த்து அணிந்து கொள்ளலாம். மாசி சரடு பாசி படியும் என்பது முதுமொழி. மாசி மாதத்தில் அணியும் உங்களுடைய மாங்கல்ய சரடு பாசி படியும் வரை நீடிக்கும். இந்த நாளில் உமையவளுக்கு விரதமிருந்து, கார அடை செய்து படைத்து வழிபாடு செய்திட வேண்டிய வரம் அருள்வாள் அன்னை பராசக்தி.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
2023 இந்த 6 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்! பயன்படுத்திக்கோங்க